search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ஷ்டம்"

    • அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.
    • அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.

    பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை. அப்படி இருக்க உழைப்பு, உழைப்பு என்று உண்ண, உறங்க நேரம் இன்றி உழைப்பவர்களை பார்த்து இருக்கிறோம். அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல் அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வை தொலைப்பவர் களையும் பார்க்கிறோம். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிடவும் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தை துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப் போவதும் இல்லை. மனிதராய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.

    மாடமாளிகையில் வாழ்பவர்கள் முதல் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப்பம் ... தனி மரியாதை .... தனி கவனம் உண்டு.

    அதிர்ஷ்டம் என்றால் என்ன?அதை அடைவது எப்படி? நாம் விரும்பும் போது வருவது அதிர்ஷ்டமா? அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால் வாஸ்துவால் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட கற்களால் அழைக்க முடியுமா? தேடும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் முகம் காட்டுவது ஏன்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது ஐந்தாமிடம். ஒருவரின் ஜனன காலத்தில் ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி மற்றும் ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களே அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது.

    அதே நேரத்தில் பிரபஞ்சத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடிய தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி ஒருவருக்கு வழங்கும் அதிர்ஷ்டத்தை பெற என்ன தகுதி வேண்டும் என்பதை சிறு புராண கதை மூலம் தெரிந்து கொள்வோம்.

    அர்ஜுனனும், கிருஷ்ணரும் உலாவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார். முதியவருக்கு மகிழ்ச்சி. `ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.


    சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலை உயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினார். முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார்.

    இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.

    அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

    சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.

    அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்துவிடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.

    செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.

    யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.

    இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல். சந்தோஷ மிகுதியால் `சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்.

    அதேநேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

    அர்ஜுனன் கண்ணனிடம், `வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே… ' இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலை உயர்ந்த கல்லை தானும் உபயோ கிக்காமல், மற்றவருக்கும் பயன்படா மல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவை இரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிட மிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.

    இந்த கதையின் நீதி பொது நலமுள்ள வர்களுக்கும், தான, தர்மம் செய்பவர்களுக்கும், பாவ புண்ணியம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ஷ்ட கடாட்சம் கிடைக்கும் என்றார். அத்துடன் எந்த செயலாக இருந்தாலும் அதன் பலன் கிடைக்க போதிய கால அவகாசம் தேவை.

    அதிர்ஷ்டம் ஒருவரைத் தேடி வரும் வரை பொறுமையாக விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.

    • பண்ருட்டி கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார்.
    • மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது, பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலையில் கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார். மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது மதுபான கடைக்கு அருகில் சாலை ஓரத்தில் இருந்த ,பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது பற்றி தகவல் அறிந்தத பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வகணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×