search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல் ஊழியர்கள்"

    அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு ஜி.டி.எஸ் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். தற்போதைய வழங்கப்பட்ட நிலுவை தொகைக்கான கணக்கீட்டுமுறை மாற்றப்பட வேண்டும். பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும். ஜி.டி.எஸ் குரூப் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 12, 24, 36 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வுகள், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். # tamilnews

    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் நேற்று 16-வது நாளாக நீடித்ததால் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்தன.
    நாமக்கல்:

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 252 கிளை தபால் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. எனவே கிராமபுறங்களில் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய, கோட்ட செயலாளர் செந்தில் கூறியதாவது :-

    நாமக்கல் மாவட்டத்தில் 16 நாட்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 570 பேர் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நாகையில் அஞ்சல் ஊழியர்கள் நேற்று 10-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 10-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜி.டி.எஸ். கோட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை கோட்ட அஞ்சல் செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், திருவாரூர் கிளை செயலாளர்கள் ரேணுகா, கோவிந்தராஜ், சண்முகநாதன், மீனாட்சிசுந்தரம், சட்டநாதன், பிரபாகரன், ராஜா, குமரவேலு, அரிதாஸ் உள்பட அனைத்து ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் நன்றி கூறினார்.

    அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. 
    ×