என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-வது நாளாக வேலைநிறுத்தம்: கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்1 Jun 2018 4:51 PM GMT (Updated: 1 Jun 2018 4:51 PM GMT)
நாகையில் அஞ்சல் ஊழியர்கள் நேற்று 10-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 10-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜி.டி.எஸ். கோட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை கோட்ட அஞ்சல் செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், திருவாரூர் கிளை செயலாளர்கள் ரேணுகா, கோவிந்தராஜ், சண்முகநாதன், மீனாட்சிசுந்தரம், சட்டநாதன், பிரபாகரன், ராஜா, குமரவேலு, அரிதாஸ் உள்பட அனைத்து ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் நன்றி கூறினார்.
அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது.
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 10-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜி.டி.எஸ். கோட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை கோட்ட அஞ்சல் செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், திருவாரூர் கிளை செயலாளர்கள் ரேணுகா, கோவிந்தராஜ், சண்முகநாதன், மீனாட்சிசுந்தரம், சட்டநாதன், பிரபாகரன், ராஜா, குமரவேலு, அரிதாஸ் உள்பட அனைத்து ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் நன்றி கூறினார்.
அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X