search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசோக் சவான்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் சவானுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜுர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் மிலிந்த் தியோரா காங்கிரசில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக்கும் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர் சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் விரைவில் பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜூர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    • நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அடுத்த நாள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

    மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு அசோக் சவான் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். மேலும் அசோக்சவான் பா.ஜனதா கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த நிலையில் இன்று அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம். இன்று நான் பா.ஜ.க.வின் அலுவலகத்தில் முறைப்படி இணைகிறேன். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
    • மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

    எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இதில் 17 கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பா.ஜனதாவை வீழ்த்துவது என்று இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சி அணியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய 2 தினங்களில் நடக்கிறது.

    இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் அகாதி கூட்டணியில இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்குவதற்கு 175 ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும். வருகிற 31 மற்றும் செப்டம்பர் 17-ந் தேதிகூட்டம் நடைபெறும். 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.

    நாங்கள் ஒரு பொதுவான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 31-ந் தேதி லோகோ வெளியிடப்படும்.

    இவ்வாறு அசோக் சவான் கூறியுள்ளார்.

    • இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும்.
    • அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    அவுரங்கபாத் :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக கட்சி அலுவலகத்தை திறப்பதற்கான நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் பாலசாகேப் தோரட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது அசோக் சவான் தன்னை பற்றி நிலவும் ஊகங்களுக்கு பதில் அளித்தார்.

    அவர் கூறுகையில், "இதுபோன்ற கருத்துகளுக்கு இயல்பாகவே நான் எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. சங்கர்ராவ் சவான் (அசோக் சவானின் தந்தை மற்றும் முன்னாள் முதல்-மந்திரி) காலத்தில் இருந்தே நாந்தெட் மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியுடன் பின்னி பிணைந்தது" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், " அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் தினமும் பதில் சொல்ல நேரிடுகிறது. இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும். அசோக் சவான் கட்சியை விட்டு வெளியேறமாட்டார். நாங்கள் அவரை எப்போதும் நம்புகிறோம்" என்றார்.

    இதேபோல பாலசாகேப் தோரட், " இதுபோன்ற யூகங்களால் அசோக் சவான் கவலையடைந்துள்ளதாகவும், கட்சியை கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் அவரின் ஆளுமை தேவை என்றும் கூறினார்.

    ராஜஸ்தானில் தனியார் பள்ளி பாடப்புத்தகம் ஒன்றில் பாலகங்காதர திலகர் குறித்து சர்ச்சை கருத்து வெளியானதால் பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.
    மும்பை:

    ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று தனது பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி பாடப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறியதாவது:-

    சுதந்திர போராட்டத்துக்கான தீயை பற்ற வைத்தவர்களுள் ஒருவரான திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடப்புத்தகங்களில் குறிப்பிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட கோடிக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பா.ஜனதா கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×