search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man died"

    • குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • அப்போது வலையுடன் சகதியில் சிக்கி வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    பழனி:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகில் உள்ள கல்லாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது40). இவர் கடந்த சில நாட்களாக பழனி குதிரையாறு அணை அருகே வசித்து வந்தார். சம்பவத்தன்று குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

    ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது கணவர் மாயமானது கண்டு அவரது மனைவி மாரியம்மாள் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ வள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    குதிரையாறு அணை அருகே அவர்கள் சென்று பார்த்தபோது கரையில் மாரிமுத்து அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அணை ப்பகுதிக்குள் தேடினர். அப்போது வலையுடன் சகதியில் சிக்கி மாரிமுத்து இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குடிபோதையில் மீனுக்கு வலை வீசியபோது அதில் தான் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவி த்தனர். இறந்துபோன மாரிமுத்துவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    • திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது.
    • அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் யூசிப்பியா நகரை சேர்ந்தவர் சையது முகமது (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பஜிரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

    இன்று காலை திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் அவர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. லேசான ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றும் போது திடீரென தீப்பிடித்தது.
    • உடம்பில் தீ பிடித்து உடல் கருகி பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 38). இவருக்கு பிரபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மீண்டும் தனது வீட்டுக்கு செல்ல முயன்ற போது பைக்கில் பெட்ரோல் இல்லை. இதனைத் தொடர்ந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றினார்.

    அப்போது திடீரென அவரது உடம்பில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது42). இவர் தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • விசேசத்திற்கு வந்த வாலிபர் கிணற்றில் குளிக்கசென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள அம்மாபட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சமயராஜ் மகன் அருணாச்சலம் (வயது 26).

    இவர் சம்பவத்தன்று தனது உறவினர்வீட்டு வசந்த விழாவிற்காக வேலப்பர் கோவில் சென்றார். அங்குள்ள கிணற்றில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.
    • இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குஜிலியம்பாறை முத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). இவருக்கு சுந்தரதேவி என்ற மனைவி, 2 மகன்களும் உள்ளனர்.

    கொத்தனார் வேலை பார்த்துவந்த பிரேம்குமார் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூல்பண்டல்கள் ஏற்றிச்சென்ற வாகனம் பைக் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
    • இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி கோணப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்பாண்டி(21). இவர் தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காக்காதோப்பு பிரிவில் வந்தபோது பரமத்திவேலூரில் இருந்து மதுரைக்கு நூல்பண்டல்கள் ஏற்றிச்சென்ற லாரி பைக் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த பிரதீப் பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி, அழகர்சாமி ஆகியோர் வாகனங்களை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரதீப்பாண்டி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
    • விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் சரவணராஜ் (வயது55). இவரது மகன் முத்துராஜ் (34). 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    மேல்சிகிச்சைக்காக சரவணராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்கள்.
    • அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் விஜயரகுநாத் (வயது 21). இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று சிங்காரநகர் பகுதியில் வேப்பமர கிளைகளை வெட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே விஜயரகுநாத் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே அகரம் சத்திரபட்டி இந்திராநகரை சேர்ந்தவர் வீரமணி(39). இவர் 4 வழிச்சாைலயில் கிரியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற டிராவல்ஸ் வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வீரமணி சம்பவ இடத்திேலயே பலியானார். தகவல் அறிந்ததும் ஏட்டு பார்த்தசாரதி அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஹெட்போன் மாட்டியபடி பணி செய்ததால் ஹாரன் சத்தம் கேட்காமல் லாரி இடையில் சிக்கிய வாலிபர் பரிதாபமாக பலியானார்.
    • தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி அபிராமிநகரை சேர்ந்த தங்கவேல் மகன் கிஷந்த்குமார் (வயது 37). இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்டிக்கர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இன்று மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு லாரியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு லாரி பின்னால் ஆரன் அடித்தபடி வந்து கொண்டிருந்தது. கிஷந்த்குமார் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்டபடி இருந்ததால் அவருக்கும் சத்தம் கேட்கவில்லை.

    அப்போது பின்னால் வந்த லாரி அவர்மீது மோதியது. 2 லாரிகளுக்கும் இடையில் சிக்கி கிஷந்த்குமாரின் தலை நசுங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்தினர். இதில் படுகாயமடைந்த கிஷந்த்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த கிஷந்த்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    • பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி பழனிசெட்டிபட்டி அண்ணாநகரை சேர்ந்த மருதை மகன் கோபிநாத்(33).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியகுளம் நந்தியாபுரம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்தார்.

    பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×