search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் பைக் விபத்தில் வாலிபர் பலி
    X

    கோப்பு படம்

    தேனியில் பைக் விபத்தில் வாலிபர் பலி

    • நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
    • விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் சரவணராஜ் (வயது55). இவரது மகன் முத்துராஜ் (34). 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    மேல்சிகிச்சைக்காக சரவணராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×