search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி வாலிபர் பலி"

    • தேனி அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்கள்.
    • அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் விஜயரகுநாத் (வயது 21). இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று சிங்காரநகர் பகுதியில் வேப்பமர கிளைகளை வெட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே விஜயரகுநாத் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×