search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
    X

    கோப்பு படம்

    தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

    • பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    • பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி பழனிசெட்டிபட்டி அண்ணாநகரை சேர்ந்த மருதை மகன் கோபிநாத்(33).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியகுளம் நந்தியாபுரம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்தார்.

    பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×