search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்  கொலையா? போலீசார் விசாரணை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

    • திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது.
    • அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் யூசிப்பியா நகரை சேர்ந்தவர் சையது முகமது (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பஜிரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

    இன்று காலை திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் அவர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. லேசான ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×