search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெட்போன் மாட்டியபடி பணி செய்ததால் விபரீதம்  லாரிகளுக்கு இடையில் சிக்கிய வாலிபர் சாவு
    X

    கோப்பு படம்

    ஹெட்போன் மாட்டியபடி பணி செய்ததால் விபரீதம் லாரிகளுக்கு இடையில் சிக்கிய வாலிபர் சாவு

    • ஹெட்போன் மாட்டியபடி பணி செய்ததால் ஹாரன் சத்தம் கேட்காமல் லாரி இடையில் சிக்கிய வாலிபர் பரிதாபமாக பலியானார்.
    • தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி அபிராமிநகரை சேர்ந்த தங்கவேல் மகன் கிஷந்த்குமார் (வயது 37). இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்டிக்கர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இன்று மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு லாரியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு லாரி பின்னால் ஆரன் அடித்தபடி வந்து கொண்டிருந்தது. கிஷந்த்குமார் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்டபடி இருந்ததால் அவருக்கும் சத்தம் கேட்கவில்லை.

    அப்போது பின்னால் வந்த லாரி அவர்மீது மோதியது. 2 லாரிகளுக்கும் இடையில் சிக்கி கிஷந்த்குமாரின் தலை நசுங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்தினர். இதில் படுகாயமடைந்த கிஷந்த்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த கிஷந்த்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×