என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்"
- திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது.
- அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் யூசிப்பியா நகரை சேர்ந்தவர் சையது முகமது (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பஜிரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.
இன்று காலை திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் அவர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. லேசான ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்