என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Cup Qualifiers"
- ஜிம்பாப்வே அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ரியான் பர்ல் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி- அப்பாவி காயா களமிறங்கினர். இன்னசெண்ட் காயா 32 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜாய்லார்ட் கும்பியுடன் கேப்டன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினர்.
ஜாய்லார்ட் கும்பி 78 ரன்கள் இருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வில்லியம்ஸ் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 2 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய ராசா 48 ரன்னில் அவுட் ஆனார். 200 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பர்ல் ருத்ரதாண்டவம் ஆடினார். இவர் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் அபிஷேக் பரத்கர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.
ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்கள் எடுத்து தோற்றது.
ஹராரே:
உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் ஹராரேவில் இன்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்னில் வெளியேறினர். ரியான் பர்ல் 50 ரன்னிலும், எர்வின் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக எர்வின் -ஜாய்லார்ட் கும்பி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே அணி 112 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜாய்லார்ட் கும்பி 26, எர்வின் 47, வெஸ்லி மாதேவேரே 2, சீன் வில்லியம்ஸ் 23 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - ரியான் பர்ல் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் அடித்தனர். 50 ரன் எடுத்த நிலையில் ரியான் பர்ல் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 5, ராசா 68 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- நேபால் அணி கேப்டன் ரோகித் அதிகபட்சமாக 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று நேபால் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் நேபால் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர். ஆசிப் ஷேக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பீம் ஷர்கி - குஷால் புர்டெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
நேபால் அணி 66 ரன் எடுத்த போது 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. குஷால் புர்டெல் 27 ரன்னிலும் அடுத்து வந்த ஆரிப் ஷேக் 6 ரன்னிலும் பீம் ஷர்கி 22 ரன்னிலும் அவுட் ஆகினர். சிறிது நேரம் தாக்குபிடித்த கேப்டன் ரோகித் 33 ரன்னில் வெளியேறினார்.
அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்ததால் நேபால் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
- யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சிறப்பாக ஆடிய ரிச்சி பாரிங்டன் சதம் அடித்தார். அவர் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
யு.ஏ.இ. சார்பில் ஜுனைட் சித்திக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ., ஸ்கட்லாந்து அணியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணி சார்பில் ஷெரீப் 4 விக்கெட் , கிறிஸ் சோல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
- ஓமன் தரப்பில் அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார்.
- இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஓமன் அணி 20 ரன்கள் எடுப்பதற்க்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜதீந்தர் சிங் - அயன் கான் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை ஹசரங்கா பிரித்தார். ஜதீந்தர் சிங் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்