search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hasaranga"

    • 30 வருடத்திற்குப் பிறகு ஜாஃப்னாவில் இருந்து கிரிக்கெட்டிற்கு வந்த வீரர்.
    • கடந்த வருடம் ராஜஸ்தான் அணியின் நெட் பவுலராக இருந்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். இவர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் அணியில் இணைவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவருக்குப் பதிலாக 22 வயது இளம் வீரரான மற்றொரு இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மாற்று வீரரான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் ஒரேயொரு டி20 போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

    லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக தனது 18 வயதில் 2020-ம் ஆண்டு விளையாடினார். 30 வருடத்திற்குப் பிறகு இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னா பகுதியில் இருந்து வந்த முதல் வீரர் ஆவார்.

    கடந்த ஐபிஎல் தொடரின்போது குமார் சங்கக்கரா இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக கொண்டு வந்தார். தற்போது முத்தையா முரளீதரன் அவரை ஐபிஎல் அணிக்கு கொண்டு வந்துள்ளார். வங்காளதேசம் பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக 33 டி20 போட்டியில் விளையாடி 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர் ஆவார்.

    • வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஹசரங்கா இடம் பெற்றிருந்தார்.
    • நடுவரை கேலி செய்ததால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கையும் ஒருநாள் தொடரை வங்காளதேசமும் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

    இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.

    4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற நாளை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ஹசரங்கா, சமீரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி:-

    தசுன் ஷனகா, பதும் நிசானகா, திமுத் கருணாரத்ணே, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரனா, குசன் ரஜிதா, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • ஆசிய கோப்பையில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

    இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது. பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31-ந்தேதி வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.

    ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.

    ×