search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Athletics Championships"

    • 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டியில் ஜோதியால் 29-வது இடத்தையே பிடிக்க முடிந்தது
    • ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார் சோபிக்க தவறினார்

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி கலந்து கொண்டார்.

    ஆனால் அவர் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து, அவருடைய தகுதிச்சுற்று பிரிவில் (ஹீட்) ஏழாவது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஜோதியின் தேசிய சாதனையாக 12.78 வினாடி உள்ளது. இந்த இலக்கைக் கூட அவரால் எட்ட முடியவில்லை.

    ஒவ்வொரு பிரிவிலும் (ஹீட்) இருந்து முதல் நான்கு பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் வேகமாக பந்தய தூரத்தை கடந்த மேலும் 4 பேர் (அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தமாக) அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ஜோதியால் 29-வது இடத்தையே பெற முடிந்தது.

    ஆண்களுக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கிருஷ்ணன் குமார், அவருடைய பிரிவில் (ஹீட்) 7-வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 50.36 வினாடிகளில் கடந்தார். அவருடைய சிறந்த ஓட்டம் ஒரு நிமிடம் 45.88 வினாடியாகும். ஒவ்வொரு ஹீட்டிலும் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மேலும், வேகமாக ஓடிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுவாரக்ள்.

    ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடக்க நாளான கடந்த சனிக்கிழமை 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

    ஏற்கனவே, 20கி.மீ. ஆண்கள் நடைபயணம், ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல், ஆண்களுக்கனா டிரிபிள் ஜம்ப், 400மீ தடைதாண்டி ஓட்டம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.

    • நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
    • ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.

    ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).

    ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    • பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது.
    • ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்தது.

    கடைசி நாளான இன்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் டுப் லான்ட்ஸ் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 6.21 மீட்டர் உயரம் தாண்டி னார்.

    ஒலிம்பிக் சாம்பியனான அர்மண்ட் இதற்கு முன்பு 6.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து அவர் புதிய உலக சாதனை புரிந்தார்.

    அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்ஸைட் 5.94 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.

    அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆக மொத்தம் 33 பதக்கத்து டன் முதல் இடத்தை பிடித்தது. 

    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்திருந்தார்.
    • இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம் என மோடி பாராட்டு

    சென்னை:

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்து இருந்தார்.

    உலக தடகள சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

    காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையிலும் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி கடுமையாக இருந்தபோதும் நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக கடுமையாக உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணமாகும். வருங்காலங்களில் நீரஜ் சோப்ரா இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

    நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 2-ம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுக்கள்.

    உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    நீரஜ் சோப்ராவின் சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்களில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.

    நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
    • பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    சென்னை:

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.

    சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா! உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
    • கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார்.

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.


    நீரஜ் சோப்ரா

    நீரஜ் சோப்ரா

    கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 10வது இடத்தை (78.72 மீ) பிடித்தார்.

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்


     தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
    • 61.12 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தை பிடித்தார்.

    ஓரேகான்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

    இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார். அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.

    • தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
    • இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.

    இதில் இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்சில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார். 'பி' பிரிவில் மற்றொரு அந்நிய வீரர் ரோகித் யாதவ் இடம் பெற்று இருந்தார்.

    இதில் 83.50 மீட்டர் இலக்கை எட்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவாக சிறந்த திறனை வெளிப் படுத்தும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

    நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். 2019-ம் ஆண்டு 2-வது சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க வில்லை.

    'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்தார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ரோகித் யாதவ் 11-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கிரெணடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ( பி பிரிவு) 89.91 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பெற்றார்.

    12 பேர் பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    டிரிபிள் ஜம்ப்பில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் எல்டோஸ் பால் முன்னேறினார். அவர் தகுதி சுற்றில் 16.68 மீட்டர் தாண்டினார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த அவர் 6-வது இடத்தை பிடித்தார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ஒருவராக அவர் வந்துஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற இந்தியர்களான பிரவீன் சித்தரவேல் (16.49 மீட்டர்) அப்துல்லா அபுபக்கர் (16.45 மீட்டர்) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    • 2-வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார்.
    • கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

    அத்துடன் 8-வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அதன் அடிப்படையில் அன்னு ராணி 8-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் 2-வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார்.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரை தொடர்ந்து, அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×