search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக தடகள போட்டி"

    • உலக தடகளத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது.
    • இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம்.

    உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக தடகளத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தான். அவரது தந்தை முகமது அஷ்ரப் கொத்தனார் ஆவார்.

    ஒரே நாளில் பாகிஸ்தானின் ஹீரோவாக உயர்ந்துள்ள 26 வயதான அர்ஷத் நதீம் கூறுகையில், 'நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதில் மகிழ்ச்சி. இப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது. இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் உணர்வுபூர்வமான தருணம். நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன்' என்றார்.

    போட்டி முடிந்ததும் நீரஜ் சோப்ராவும், 3-வது இடத்தை பெற்ற வால்டெஜியும் அவர்களது தேசிய கொடியுடன் போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். அப்போது அருகில் நின்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை சோப்ரா புகைப்படம் எடுக்க அழைத்தார். அவரிடம் பாகிஸ்தான் தேசிய கொடி இல்லாததால் அவரும் நீரஜ் சோப்ராவுடன் இணைந்து இந்திய தேசிய கொடியின் பின்னணியில் நிற்க வேண்டியதானது.

    இந்த காட்சி சமூக வலைதளத்தில வைரலாகியுள்ளது. பாராட்டுகளும் குவிகிறது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 'நதீமை இந்த அழகிய புகைப்படத்தில் இடம் பெற சோப்ரா அழைத்தார். அண்டை நாட்டவர்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதற்கு பதிலாக அன்பை பரப்ப வேண்டும்' என்றும், இன்னொரு ரசிகர் 'என்ன ஒரு அற்புதமான படம். இரு நாட்டை சேர்ந்த இரு கதாநாயகர்கள்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

    • 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
    • ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.

    ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.

    • நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
    • ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.

    ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).

    ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    • அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
    • 61.12 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தை பிடித்தார்.

    ஓரேகான்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

    இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார். அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.

    ×