search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dies"

    • பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம், பம்புசெட் உள்ளது.

    பழுதடைந்து காணப்பட்ட பம்புசெட்டை அகற்றிவிட்டு, கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கதவாலம் ஊராட்சி சேர்ந்த அப்துல் சலீம் (வயது 45) கூலி தொழிலாளி.

    இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலை இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென வலிப்பு வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை - பெங்களூர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவரும் இங்கு வேலை செய்து வந்தார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது விஜய்க்கு திடீரென வலிப்பு வந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் ராமநாதபுரம் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி பச்சையம்மாள்.

    இவர் தனது தாய் அமலமேலு தம்பி ரகு (வயது42) ஆகியோருடன் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான ரகுவிற்கு இன்னும் திருமணமாகவில்லை.  ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    மது போதையில் அவர் பாலத்தில் நடந்து வந்தபோது தவறி விழுந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
    • ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.

    ஆட்டோ, நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் ‘டிரில்லிங்’ எந்திரம் வைத்து துளையிடும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டார்.
    • சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது ‘டிரில்லிங்’ எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அய்யப்பன் அலறினார்.

    பூந்தமல்லி:

    திருவாரூர் மாவட்டம் பெரம்பொன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவரது அக்காள் ராஜேஸ்வரி குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் வந்தார். நேற்று இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் 'டிரில்லிங்' எந்திரம் வைத்து துளையிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது 'டிரில்லிங்' எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அலறினார். இதனை கண்டதும் அவரது அக்காள் ராஜேஸ்வரி தம்பியை காப்பாற்ற முயன்று தள்ளிவிட்டார். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    சிம்மக்கல் முத்து இருளப்பன் சந்தை சேர்ந்தவர் அருண் பாண்டி (27), கட்டிட தொழிலாளி. யாகப்பா நகர் பாண்டியன் தெருவில் உள்ள சங்கரன் (56) என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அருண்பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வழியிலேயே அருண்பாண்டி பரிதாபமாக இறந்தார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
    • மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூ டல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (26) என்பவரின் சகோத ரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். செந்தில் தனது மைத்துனர் கார்த்தி வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.

    அப்போது, காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டி ருந்த செந்தில் எதிர் திசையான பாகூர் பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். பாதி வழி சென்ற அவரால், அதன் பின்னர் நீந்தி செல்ல முடியவில்லை. மேலம் காவேரி ஆற்று தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேடர்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை வீரர்கள் அப்பகுதியில் இரு கரையிலும் செந்திலின் உடலை தேடிப் பார்த்தனர்.

    இரவு சுமார் 8 மணி அளவில் செந்தில் உடல் சோழசிராமணி பகுதியில் ஒதுங்கி இருந்தது. இதை யடுத்து தீயணைப்புத் துறையினர் செந்தில் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தி லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 70). கூலித்தொழிலாளி.

    கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.

    இந்தநிலையில் அனந்தலை மேல்புதுப்பேட்டை பசும் பொன் நகரில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குப்புராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
    • திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையைச் சேர்ந்த திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொ ழுது நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியி லேயே தங்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
    • குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் காவேட்டிப் பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது. இத னால் உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீ சார், அவரை மீட்டு நாமக் கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    குடிபோதையில் இறந்த அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி.
    • கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் திடீரென இவர் உயிரிழந்தார். இதை அறிந்த பச்சமுத்துவின் உறவினர்கள் இன்று மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து இறந்த பச்சமுத்துவின் மகன் கூறும்போது, எனது தந்தைக்கு சி.டி. ஸ்கேன் எடுத்தனர். அதேபோல விபத்தில் அனுமதிக்கப் பட்ட, எனது தந்தை பெயர் கொண்ட மற்றொரு பச்சமுத்து என்பவருக்கும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இருவரின் மருத்துவ அறிக்கை மாறிய தால் எனது தந்தைக்கு தர வேண்டிய சிகிச்சை வேறு ஒரு நபருக்கும், தலையில் அடிபட்டு விபத்தில் அனு மதிக்கப்பட்ட பச்சமுத்து என்பவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை எனது தந்தைக்கும் அளித்த தால், அவர் உயிரிழந்து விட்டார்.

    தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது இறப்புக்கு தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மருத்துவர்கள் கவனக்கு றைவாக செயல்பட்டால், எவ்வாறு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வந்து சிகிச்சை பெற முடியும்? எனவே மருத்து வர்கள் கவனமுடன் செயல்பட்டு சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் எனது தந்தை உடலை பிரேத பரிசோ தனை செய்யாமல் தர வேண்டும் என தெரி வித்தார். மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த தன் காரணமாக, தந்தை இறந்ததாக கூறி மருத்துவ மனை டீன் அலுவலகத்தை மகன் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    ×