search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளி சாவு
    X

    வடமாநில தொழிலாளி சாவு

    • திடீரென வலிப்பு வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை - பெங்களூர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவரும் இங்கு வேலை செய்து வந்தார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது விஜய்க்கு திடீரென வலிப்பு வந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×