search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    குன்றத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் ‘டிரில்லிங்’ எந்திரம் வைத்து துளையிடும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டார்.
    • சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது ‘டிரில்லிங்’ எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அய்யப்பன் அலறினார்.

    பூந்தமல்லி:

    திருவாரூர் மாவட்டம் பெரம்பொன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவரது அக்காள் ராஜேஸ்வரி குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் வந்தார். நேற்று இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் 'டிரில்லிங்' எந்திரம் வைத்து துளையிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது 'டிரில்லிங்' எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அலறினார். இதனை கண்டதும் அவரது அக்காள் ராஜேஸ்வரி தம்பியை காப்பாற்ற முயன்று தள்ளிவிட்டார். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×