search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Health Care"

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.
    ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்திய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்திய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும்.

    தாய்மை காலத்தில் கணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்திய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.

    பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம். செக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்தியம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.

    இரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.

    பெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.



    தாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.

    உடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.

    தான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.

    தாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.

    குழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.

    அந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    பெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தாம்பத்தியத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்தியம் தொடரலாம். 
    கோயில்களுக்கு செல்வது, பூஜை செய்வது என்று கூறி பெண்கள் மாதவிடாயை தள்ளி போடுவதற்கு மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும்.
    கோயில்களுக்கு செல்வது, பூஜை செய்வது என்று கூறி இயற்கையாக நேரும் மாதவிடாயை பெண்கள் பலர் தள்ளி போடுகின்றனர். கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாய்யை மூடநம்பிக்கையின் காரணமாக தள்ளி போடுகின்றனர்.

    பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியே ஒரு அறையில் தங்க வைப்பர். அவர்களுகென்று தனி தட்டு, படுக்கை அனைத்தும் தனியாக தீண்டதகாதது போல் உணர்ந்து வெளியில் இருக்க வைப்பர்.

    இதனால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் பலரும் இதனை தள்ளி போடுவதற்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும் அதனை தொடர்ந்து செய்கின்றனர். தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதா என்றே பலரும் யோசனை செய்கிறார்கள்.

    முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக அறையில் இருக்க வைத்தனர் என்றால் அந்நேரத்தில் ஓய்வு தேவை அதன் காரணத்தாலே அவர்களுக்கென்று தனியாக ஒரு இடம் கொடுத்தார்கள். ஆனால் நாளடைவில் அது தீட்டாக மாறி பலரும் தீண்டதாகத பெண்கள் என்றே சித்தரித்தனர்.

    மாதவிடாய் நேரத்தில் எந்த ஒரு தெய்வமும் கோயிலுக்கு வரக்கூடாது, பூஜை செய்யக் கூடாது என்று எந்த இதிகாசத்திலும் குறிப்பிடவில்லை. இப்போது உள்ளவர்கள் சாமி மீது அதீத மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு பங்கு கூட உடல்நலம், ஆரோக்கியம் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

    இம்மாத்திரை உட்கொள்வதினால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்றவற்றை வரக்கூடும். அதேபோல் இதனை ரத்த அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, உடல் பருமன் ஆகியோர் கண்டிப்பாக உட்கொள்ள கூடாது. பெண்கள் இதனை சாப்பிடுவதால் பெரும் பிரச்சனைகளை பின்நாளில் சந்திக்க நேரும்.

    தவறான புரிதலுக்காக, சாமி என்பதற்காகவும் மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு சென்று இது போல் அநாவசியமான செயல்கள் செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் தள்ளி போடுவதற்கு மாத்திரை உட்கொள்வது தவறு! உடல்நலத்திற்கு தீங்கு!
    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
    கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.

    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும்  இதம் தரும்.

    பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான இயற்கை வழிமுறைகள் உள்ளன.
    பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல (reduce belly fat for mothers after birth) கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது. கொழுப்பைக் குறைப்பது எப்படி? அவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

    கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

    இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். வெறும் வயிற்றில் பழமா…. ஆம்… காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

    எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.



    தொப்பையைக் குறைக்கும் எளியப் பயிற்சி (Exercise for Belly Fat)

    பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

    தொப்பையைக் (Belly Fat) குறைக்கும் எளிய வழிகள்

    * வாரம் இருமுறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    * குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு, அதை குடிநீராக குடிக்கலாம்.

    * பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லையென்றால் பசிக்கும் வரை காத்திருங்கள்.

    * பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, ஐயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

    * இனிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றை அவசியம் தவிர்க்கவும்.

    * எந்த உணவைச் சாப்பிட்டாலும் உதடுகள் மூடி இருக்க வேண்டும். பற்கள் மட்டும் உணவை மெல்ல வேண்டும். மிக்ஸியில் ஜாரை மூடிதானே அரைப்போம். அதேதான்… உதடுகளை மூடி நன்கு மென்று சாப்பிடுங்கள். தொப்பை வரவே வராது.

    * நன்கு மென்று கூழாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளவருக்கு, கொழுப்பும் சேராது. தொப்பையும் இருக்காது.
    பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்களும் பயமும் அதிகமாக இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்த கொள்ளலாம்.
    பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். என்னென்ன பயம்? அதன் உண்மை காரணங்கள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

    பிறவி குறைபாடுகள்

    டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் இன்னும் பல பிறவி குறைபாடுகளை நினைத்து, நீங்கள் பயப்படலாம். எப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்ததோ அன்றிலிருந்து குழந்தையின் நன்மைகாக அதிகம் யோசிப்பீர்கள். பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள் என்பதால் நிம்மதி கொள்ளுங்கள். தற்போதெல்லாம் நிறைய ஸ்கேன், பரிதோசனைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிடலாம். உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிடுங்கள். தினமும் ஃபோலிக் ஆசிட் உணவுகள், மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.
    நரம்பு தொடர்பான, வளர்ச்சி தொடர்பான அனைத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிக முக்கியம். எனவே சத்துள்ள உணவுகளுக்கே முதலிடம்.
    பயம் குழந்தையை அதிகம் பாதிக்கும் என்பதால் அமைதி கொள்ளுங்கள். தியானம், இசை கேட்பதில் ஈடுபடுங்கள்.

    கருசிதைவு

    10 - 20% கருசிதைவு ஏற்படத்தான் செய்கிறது. க்ரோமோசோமல் அப்நார்மலிட்டி எனும் பிரச்சனை மூலம் கருசிதைவாகுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை. இதெல்லாம் இருந்தாலும் உங்களது மைண்ட், எண்ணம், மனம் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். பாசிட்டிங் எண்ணெங்கள் (நேர்மறை எண்ணங்கள்), இருந்தாலே எதையும் வெல்ல முடியும். கெஃபைன் உள்ள பொருட்களை அறவே தவிர்க்கவும். நிக்கோட்டீன் இருப்பதையும் தவிர்க்கவும். சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருக்க வேண்டாம். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால், கருசிதையும் வாய்ப்புகள் அதிகம். ரத்தப்போக்கு இருந்தால் தொடக்கத்திலே மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.



    குறை பிரசவம்

    பெரும்பாலான தாய்மார்கள் குறைபிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்கள். 37 வாரம் முடியாமல் முன்னராக குழந்தை பிறந்தால், அந்த பிரசவத்தை குறை பிரசவம் எனச் சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் 37-வது வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தாலும் அதற்கேற்ற தக்க சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். யூட்டரின், சர்விகல் அப்நார்மலிட்டி இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வர வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள். குறை பிரசவம் வரலாம் என டாக்டர்கள் முன்னரே யூகிக்கப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பார்கள். பயம் வேண்டாம்.
    உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இவற்றை சீராக, சரியாக வைத்துக் கொள்வது தாய்மார்களின் பொறுப்பு. இந்த 3 விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால் பயம் எதற்கு? உடல் எடையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.

    தொப்புள் கொடி சுற்றிக் கொள்வது

    நிறைய கதைகளை கேட்டிருப்போம் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி உள்ளது. வயிற்றில் உள்ள அந்த நீர் மூலமாக தானாக தொப்புள் கொடி சரியாகிவிடும். சிலருக்கு சரியாகவில்லை என்றாலும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள்.

    உடல் எடை அதிகரிப்பது

    இது எல்லாருக்கும் நடக்க கூடிய விஷயம். உங்களது உடலின் தோற்றம் மாறுகிறதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில மாதங்களிலே பிரசவத்துக்கு பின்னர் சரியாகிவிடும். எடையை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், கர்ப்பக்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். நீங்களாக எந்த வொர்க்அவுட்டும் செய்ய வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    வலி மிகுந்த பிரசவம் இருக்குமா…

    பிரசவத்தை நினைக்கும்போது பயம். பிரசவ வலி வந்தவுடன் மருத்துவமனைக்கு சரியாக செல்ல முடியுமா எனப் பயம். பிரசவ வலி, பனிக்குடம் உடைதல் இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். உங்களுக்கு நீங்களே விழிப்புணர்வு ஊட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக நடக்கும். சுலபமான பிரசவம் நடக்கும்.
    பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைவில் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
    நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான்.

    ஆனால் அவர்களுக்கு ஏதாவது நோயின் அறிகுறி தென்பட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் கவலைப்படும் பெண்கள் தங்கள் உடல் நலன் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

    பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

    * சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

    * மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் "Intraductal Papillomas" என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.



    * மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    * எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * மச்சம் திடீரென பெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

    * மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

    * சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய். கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் கிடைக்கும் பொருளை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. அதிகம் காபி, டீ போன்றவை அருந்துவதாலும் பித்த நோய் வரும்.

    பித்த நோய் பெண்களை மிகவும் சிரமப்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாந்தி, உடலில் என்ன செய்கிறதென்றே சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும். பசிக்காது, சரியாக தூக்கம் வராது. தலைசுற்றல் வாந்திவருவது போன்ற நிலை இருந்து கொண்டே இருக்கும்.

    இதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுவது கீழே காணும் மருந்துதான் இதை மிஞ்சிய வைத்தியம் பித்தத்திற்கு எதுவுமில்லை.

    சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம். காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும் பல மருத்துவ குணங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது.

    சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது.

    மேலும் அரைக் கீரைச் சாறில் இஞ்சியை அரைத்துக் குடித்தால் பித்த நோய் குறையும்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடல் எடையில் திடீர் ஏற்றம் இருப்பது உண்மைதான். அதற்கான காரணங்கள், தீர்வுகளை அறிந்து கொள்ளலாம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் மாறும். அதனால் உடல் எடையில் தாறுமாறான மாற்றங்கள் தெரியும்.

    வயதாவதன் காரணத்தால் தசைகளின் அடர்த்தி குறைந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் கலோரிகளை எரிக்கும் ஆற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மெனோபாஸ் பருவத்தில் உள்ளவர்கள், வழக்கமான உணவுகளை உண்டுகொண்டு, உடற்பயிற்சிகளின் அளவை அதிகரிக்காமலிருந்தால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது. வழக்கமாக உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள்கூட மெனோபாஸை நெருங்கும்போது அதை நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு.

    மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு ஏன் கவனத்துக்குரியது?

    உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் அளவுக்கதிகமாக கூடும்போது அது எந்த வயதிலுமே ஆபத்தானதுதான். குறிப்பாக மெனோபாசுக்குப் பிறகு அப்படி எடை அதிகரிப்பதன் விளைவாக இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாசப்பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
    தடுக்க என்ன செய்யலாம்?

    முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனளிக்கும். எடை தூக்கும் பயிற்சிகள் உடலை உறுதியாக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். நடைப்பயிற்சி மிக நல்லது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடக்கலாம். 75 நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம்.

    30 வயதில் நீங்கள் சாப்பிட்ட மாதிரியே 50 வயதிலும் சாப்பிட்டு, எடை ஏறாமலிருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மெனோபாஸை நெருங்கும்போது உணவுத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களின் அளவைக்கூட்டி, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும்.



    காபி, டீ உட்பட எதிலும் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மறைமுகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

    சிலருக்கு நள்ளிரவில் பசிக்கும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் சிப்ஸ், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். அது தவறு. இரவு உணவு முடித்து 2 மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் மற்றும் ஏதேனும் பழம் சாப்பிடுவது சிறந்தது.

    மெனோபாசின் முக்கிய தொந்தரவுகளில் ஒன்று தூக்கமின்மை. தூக்கம் பாதிக்கப்படும்போது பலரும் எதையாவது கொறிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறது ஆய்வொன்று. பகல் தூக்கம் தவிர்ப்பதன் மூலம் இரவில் முழுமையான தூக்கம் பெறலாம். தூங்கும் அறையும் சூழலும் இதமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

    மன அமைதியும் உதவும் எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும். மன அழுத்தத்தின்போது கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர அது காரணமாகிவிடும். லேசான மன அழுத்தம் எட்டிப் பார்க்கும்போதே புத்தகம் வாசிப்பது, தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினால் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    மெனோபாஸ் பாதிப்புகளுடன் எடை அதிகரிப்பும் கட்டுக்கடங்காமல் போவதாக நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஹெச்.ஆர்.டி எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்து உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
    பெண்கள் தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும் என்றும் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்று சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
    நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை, குதிகால் செருப்புகள். அவை பெண்களின் நடைக்கும், உடைக்கும் பொருத்தமான தேர்வாக அமைகிறது. அவைகளை அணிவதை அலங்காரத்துடன் கூடிய அந்தஸ்து சார்ந்த விஷயமாக பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

    ‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.

    இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.



    எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

    மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.

    ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.

    பெண்களே நாகரிக மோகத்தைவிட, உடல் ஆரோக்கியம் மிக முக்கியமல்லவா! 
    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
    முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.

    ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.

    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

    கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்சனை கொண்ட கால்வீக்கம், பிரச்சனை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்சனை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.

    ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்சனை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.

    கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.

    இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.

    இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.



    சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்சனை இல்லாத வீக்கம்’ என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.

    கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.

    இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.

    கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

    ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.

    இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

    சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு. இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...

    இதயத்தில் பிரச்சனை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.

    ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கு...

    சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.

    பெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருக்கிறது என்றும், 18 சதவீதம் பெண்களுக்கு இதனாலேயே மலட்டுத் தன்மை உண்டாகிறது’ என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி PCOS கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்கும் பொருட்டு பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, வெள்ளை ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, கம்பு, சோளம்) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடவும்.

    * நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு சீராக இருக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிக நார் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களும்
    பெற்றுள்ளன.

    * புரதம் நிறைந்த உணவுகளை கார்போஹைட்ரேட் உணவுடன் சேர்த்து உண்ணும்பொழுது ரத்த குளுக்கோஸ் உயர்வதை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இட்லி-சாம்பார், பொங்கல்-சாம்பார், சப்பாத்தி-முட்டைகறி, புட்டு-கடலைகறி போன்றவற்றை குறிப்பிடலாம்.

    * ஒரு நாளைக்கு 2400 மில்லி கிராமுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ளும் பழக்கத்தை பழகிக் கொள்வது நல்லது. உப்புக்குப் பதிலாக எலுமிச்சை சாறு, வினிகர், மிளகு, மூலிகைகள் பயன்படுத்தலாமே!

    * 4 அல்லது 5 வகை எண்ணெய்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். கடலை, எள், கடுகு ஆலிவ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வெவ்வேறு உணவுகளுக்கு உபயோகிக்க பழகுங்கள்.

    * பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதை(Flax seeds) நல்ல வகை கொழுப்புக்கள் நிறைந்திருக்கிறது. இவ்வகையான உணவுகள் சிற்றுண்டிக்கு சரியான தேர்வாகிறது.

    * ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைப் பெற உதவுகிறது.



    * அனைத்து விதத்திலும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், சர்க்கரை வகைகளை தவிர்ப்பது மிக அவசியமாகும்.

    * தினமும் 2 - 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதில் வெள்ளரி, புதினா அல்லது எலுமிச்சை சேர்ப்பதன் மூலம் உங்கள் குடிநீரை சுவையள்ளதாக மாற்றலாம்.

    இன்னும் சில டிப்ஸ்...

    * இரவு தூக்கம் குறைந்தது 6 - 8 மணி நேரம் இருப்பது அவசியம். ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் அளவையும் செயல்பாட்டையும் நிச்சயம் பாதிக்கும்.

    * உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். ஏரோபிக் பயிற்சிகளும் வலிமை பயிற்சியையும் இணைந்து செய்யும் பொழுது நல்ல பயனைக் கொடுக்கும்.

    * உங்கள் மாதவிடாய் நாட்களை குறிப்பு வைக்க தொடங்குங்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது இரு சுழற்சிக்கு 40 - 50 நாட்களுக்கு மேல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    இப்பொழுது உங்களுக்கு PCOS டயட் பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உணவை அக்கறையோடு தேர்வு செய்தால் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்!
    ×