search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செருப்பு"

    • தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
    • குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    • எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
    • அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.

    இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.

    அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.

    மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.

    அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.

    அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது

    இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

    நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.

    இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.

    வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது. 

    • பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
    • விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

    திருமலை:

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

    எனவே, அந்த மையங்களில் செருப்புகள் மற்றும் ஷூக்களை பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப் படுகிறது.

    இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணி காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டுப் போட்டு சென்றனர்.

    இதை பார்த்த சிலர், 'இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகத்தால் செருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?' என கேள்வி எழுப்பினர்.

    • கவுன்சிலர் தேர்தலின்போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருந்தார்.
    • அவற்றை நிறைவேற்றாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.

    கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

    இதற்கிடையே, அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.

    இந்நிலையில், நேற்று நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
    • நீரிழிவு நோயாளிகள் சிறப்பு காலணிகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.

    இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.

    சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.
    • மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை வெயில் முடிந்து, பருவ மழை ஆரம்பித்திருக்கிறது. வெயில் காலத்தைப் போலவே, மழைக்காலத்திலும் சரும பராமரிப்பு, சரியான உடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். காலணிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

     மழைக்காலத்தில் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக் கூடாது. வெளியில் போய் வந்த பிறகு காலணிகளுக்குள் இருக்கும் நீரை வடிய வைத்து, உலர வைக்க வேண்டும். வாய்ப்பில்லாதவர்கள் காலணிகளை உலர வைக்க ஹேர் டிரையரை உபயோகிக்கலாம்.

     ஈரப்பதத்தை உலர வைக்கத் தவறினால் பாதத்திலும், விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்றுகள், சேற்றுப்புண் பாதிப்புகள் வரக்கூடும்.

     ஈரமான காலணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க சிலிக்கா ஜெல், கற்பூரம், நாப்தலின் உருண்டைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், காலணிகளில் இருந்து துர்நாற்றத்தை நீக்கவும் வழி செய்யும்.

     மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க தண்ணீர் புகாத, வாட்டர் புரூப் வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் நோய்த்தொற்று, கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

     மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இவை எதிர்பாராமல் மழை நீரில் மாட்டிக் கொண்டால், நடக்கும்போது சிரமத்தை ஏற்படுத்தும்.

     ஷூ உபயோகிப்பவர்கள், மழை நீர் புகாத ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லையெனில் ஷூவுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.  ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 'பிளிப் பிளாப்' வகை காலணிகள், மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. இவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைக்கும்.

     ரப்பர்-சோல்ட் செருப்புகள், மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தைக் கொடுக்கும். பாசி, சகதி போன்றவை வழுக்கி விடாமல் தடுக்கும்.

     பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானவை. ஈரம்படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.

    • காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில், பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த சமயத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கோடையில் காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில யோசனைகள் இதோ:

    இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம். காலின் பெருவிரலுக்கு இடையில் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். கோடையில், அணியும் காலணிகள் வழக்கமாக அணிவதை விட, அளவில் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.

    அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தட்டையான காலணிகளைத் தவிர்த்து, மெத்தென்று இருக்கும் வகையிலான மென்மையான காலணியையே தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் சுவாசிக்க அனுமதிக்கும் வகையிலும், இயற்கை வெப்ப பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையிலும், காற்றோட்டமான காலணிகளைத் தேர்வு செய்வதும் கட்டாயம். தூய்மையான மெல்லிய தோலால் செய்யப்பட்ட காலணிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    நாம் எந்த வகையான காலணிகளை அணிந்தாலும், அன்றைய நாள் முடிவில், கால்களுக்குச் சிறிது நேரம் மசாஜ் தேவை. பருவ நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ அல்லது வெது வெதுப்பான நீரிலோ கால்களை சிறிது நேரம் வைத்திருந்த பின், லேசாக மசாஜ் செய்யலாம்.

    சில வகை காலணிகள்:

    கிளாடியேட்டர்கள்:

    இது பெண்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய கோடைக்கேற்ற காலணி. அந்தக் காலத்தில், போரின் போது கிரேக்க மற்றும் ரோமானியர்கள் அணிந்திருந்த காலணி போன்றதாகும். இந்தக் காலணி, கீழ்ப் பகுதி தட்டையாகவும், உள்ளங்கால் முதல் மேல் பகுதி வரை அகலமான குறுக்குப் பட்டைகளுடனும் இருக்கும். இது அணிவதற்கு மிகவும் வசதியானது. வெளியூர் பயணத்தில் நீண்ட தூரம் நடக்கவும் ஏற்றது.

    பிளிப்-பிளாப்ஸ்:

    இவை முன்பக்கத்திலிருந்து தொடங்கி பக்கவாட்டில் முடிவடையும் வரை, ஆங்கில எழுத்து 'ஒய்' வடிவில் பட்டைகளைக் கொண்டிருக்கும். இறுக்கமாக இல்லாததால், பெண்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், பாதங்களை உறுத்தாமலும் இருக்கும்.

    ஸ்டைஸ்லைடர்கள்:

    கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பிரபலமாக இருக்கும் காலணி இது. இவை, பின்பக்கம் உயரம் குறைவாகவும், கால்களை மறைக்காமல் திறந்தபடி இருக்கும் வகையிலான காலணிகள்.

    ×