search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Devarakonda"

    • சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதையடுத்து சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


    சமந்தா

    இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


    சமந்தா

    இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • இப்படம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா நேற்று விசாரணைக்கு ஆஜாரானார்.

    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்திருந்தார். லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா.
    • இவர் தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் உருவான நோட்டா, டியர் காமரேட் போன்ற படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    விஜய் தேவரகொண்டா - சிவகார்த்திகேயன்

    இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, ''விஜய்தேவரகொண்டா ப்ரின்ஸ் போல இருக்கிறார். மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் பான் இந்தியா நடிகராகிவிட்டார். விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது" என்றார் கூறினார்.

    • இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் ‘லைகர்’.
    • இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.


    லைகர்

    இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற 'சைமா -2022' விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு "யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா" என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம்.


    விஜய் தேவரகொண்டா

    அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. நான் இங்கு விருது வாங்குவதற்காக வரவில்லை. உங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன். இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

    • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர்.
    • இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    அவ்வபோது இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

     

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இருவரும் ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 

    • நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    • இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.


    ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மேலும், இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா

    இதையடுத்து நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகிறார்கள் என தகவல் பரவி வந்தது. இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா "இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் படம் வசூலில் சரிவை சந்தித்தது.
    • தற்போது அவர் நடிக்க இருந்த அடுத்த படத்தில் அவர் சம்பளம் வாங்காமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்துக்கு விஜய் தேவரகொண்டா ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

     

    இப்படத்தின் வசூல் சரிவால் விஜய் தேவரகொண்டா ரூ.6 கோடியை திருப்பி கொடுத்து, லாபத்திலும் பங்கு வேண்டாம் என்று தெரிவித்தாகவும், இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் சம்பளத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    லைகர் படம் எதிர்ப்பார்த்த அளவு வருமானம் ஈட்டாததால் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்க இருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் ஜனகன படத்தில் நடிக்க முன்வந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் நடித்தால் படத்தின் பணிகளை திரும்ப தொடர படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

     

    • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
    • லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லைகர்

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் தோல்வியால் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி அறிவித்துள்ளார்.


    சார்மி கவுர்

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ''கொஞ்சம் அமைதியாகுங்கள் இளைஞர்களே, சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப்போகிறேன். எங்கள் பட நிறுவனத்தை மேலும் திடமாகவும், உயர்ந்த நிலையிலும் தயாராக்கிக்கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம். அதுவரை வாழவிடு.. வாழு.." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
    • லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லைகர்

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. லைகர் திரைப்படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜனகணமன என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


    லைகர் படக்குழு

    சார்மி கவுர், வம்சி பைட்டிப்பள்ளி, மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், லைகர் படத்தின் தோல்வியின் காரணமாக ஜனகணமன படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இதனால் பூரி ஜெகன்நாத்தும், விஜய் தேவரகொண்டாவும் பேச்சுவார்த்தை நடத்தி இப்படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
    • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 'லைகர்' திரைப்படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


    லைகர்

    இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக சரிந்தது. தற்போது வரை லைகர் திரைப்படம் ரூ.55 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை சார்மி கவுர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 கோடி வரை அவர் நஷ்ட ஈடாக தரலாம் என கூறப்படுகிறது.


    லைகர்

    அதேபோல, படத்தால் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க இயக்குனர் பூரி ஜெகந்நாத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
    • விராட் கோலியின் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. டோனி படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் படமாக வெளியானது. இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற நிகழ்வை இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார்.

    விஜய் தேவரகொண்டா 

    விஜய் தேவரகொண்டா 

     

    தற்போது விராட் கோலி வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் விராட் கோலி பாத்திரத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் துபாய் சென்ற விஜய் தேவரகொண்டாவிடம் நீங்கள் எந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

     

    இதற்கு பதில் அளித்து விஜய் தேவரகொண்டா கூறும்போது, ''கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஏற்கனவே நடித்து விட்டார். எனக்கு விராட் கோலி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலியாக நடிப்பேன்" என்றார். இவர் விராட் கோலி வாழ்க்கையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
    • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது.

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.


    லைகர்

    மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் தோல்வி குறித்து நடிகை சார்மி பேசியதாவது, "ரசிகர்கள், வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலை இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள்.


    லைகர்

    தெலுங்கில் வெளியான 'பிம்பிசாரா', 'சீதா ராமம்', 'கார்த்திகேயா 2' படங்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்தப் படங்கள் ரூ.150  கோடியில் இருந்து ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பை போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் தெரியவில்லை.

    கொரோனாவால் இந்தப் படத்தை உருவாக்க 3 வருடம் ஆகிவிட்டது. பல கஷ்டங்களுக்குப் பிறகே படத்தைத் தயாரித்தோம். ஆனால், ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது" இவ்வாறு பேசினார்.

    ×