search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Devarakonda"

    • சமந்தா -விஜய் தேவரகொண்டா இணைந்து தற்போது 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் இரண்டாம் பாடலான "ஆராத்யா" பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.



    இதையடுத்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



    'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான ஆராத்யா பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தற்போது 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    'விடி 13'  படக்குழு

    இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 13-வது படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார். 'விடி 13' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய்யின் 'வாரிசு' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


    'விடி 13'  படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 13' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். 


    • சமந்தா -விஜய் தேவரகொண்டா இணைந்து தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    விஜய் தேவரகொண்டா பதிவு

    இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்பாடலின் படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா வீடியோ எடுத்துள்ளார். இதனை அவர் ஒரு தொகுப்பாக தயார் செய்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இடையேயான அன்பும் நட்பும் அழகாக வெளிபடுவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளன. 


    • நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.



    இதையடுத்து குஷி படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

     

    குஷி

    குஷி


    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

     

    குஷி

    குஷி

    இந்நிலையில் குஷி படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 9ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • நடிகை ராஷ்மிகா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.

    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.


    விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா

    ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன.


    ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா

    இதையடுத்து நடிகை ராஷ்மிகா தனது பிறந்த நாளின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவின் விருப்பமான மோதிரம் என்றும் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் விரைவில் மகிழ்ச்சியான செய்தியை ராஷ்மிகா கூறுவார் என்றும் ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.

    இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை ராஷ்மிகா அந்த ஊடகம் வெளியிட்டிருந்த பதிவை பகிர்ந்து 'ரொம்ப யோசிக்காதீங்க' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி படக்குழு

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி சமந்தா இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது.


    குஷி போஸ்டர்

    இந்நிலையில், 'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குஷி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா மீண்டும் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் ஷிவா நிர்வாணா தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
    • இவர் தனது 100 ரசிகர்களை தேர்வு செய்து விமானத்தில் மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார்.

    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை பிறமொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியானது. தற்போது குஷி படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா


    சில தினங்களுக்கு முன்பு தனது 100 ரசிகர்களை தேர்வு செய்து சுற்றுலா அனுப்ப இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவித்து இருந்தார். அதற்கான அனைத்து செலவுகளும் ஏற்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். எந்த இடம் என்பதை தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என்றும் கூறியிருந்தார்.


    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    இந்நிலையில் தற்போது 100 ரசிகர்களையும் தேர்வு செய்து மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார். விமானத்தில் செல்லும் ரசிகர்கள் கையசைத்து உற்சாகமாக கூச்சல் போடும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டு 100 பேரை சுற்றுலா அனுப்புவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • 'குஷி' திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
    • விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பரசுராமுடன் இணைந்துள்ளார்.

    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்' பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார்.


    பரசுராம் -விஜய் தேவரகொண்டா -தில்ராஜு

    கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.

    இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்க உள்ளனர். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமந்தா பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


    விஜய் தேவரகொண்டா - சமந்தா

    இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

    நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


    விஜய் தேவரகொண்டா - சமந்தா

    இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து விஜய் தேவரகொண்டா, "முழு ஆரோக்கியத்துடனும் பெரிய புன்னகையுடனும் நீங்கள் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

    விஜய் தேவரகொண்டா - சமந்தா
    விஜய் தேவரகொண்டா - சமந்தா

    நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
    ×