என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vice President"
- இதில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும்.
- மக்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:
உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த முக்கியமான பிரச்சினையில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா.
- நீதிபதிகளின் கண்ணியம் தவிர்க்க முடியாது.
ஜக்தீப் தன்கர், 1979 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் வழக்கறிஞராக பணியாற்றிவர். 1990 ல் அவர் ராஜஸ்தானின் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் 2016 ஆண்டு சட்லஜ் நதி நீர் வழக்கில் ஹரியானா மாநிலம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பே, நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு அடிப்படையானது என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது என்றும் இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா அனைத்து மட்டத்திலும் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.
- நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் சந்தர்ப்பம்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.
இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது. இன்று இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.
விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.
இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும்.
- துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
புதுடெல்லி :
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு பார்வை இது:-
* துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும். மரணம், ராஜினாமா, நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி பதவி காலியாகிறபோது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறவரையில், துணை ஜனாதிபதிதான் தற்காலிக ஜனாதிபதி ஆக பொறுப்பேற்பார். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கான அனைத்து அதிகாரங்கள், சலுகைகள், சம்பளம், அலவன்சுகள் உண்டு. ஆனால் அவர் மாநிலங்களவை தலைவராக பணியாற்றவோ அதற்கான சம்பளம், அலவன்சுகளையோ பெற முடியாது.
* துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுக்காலம்தான் என்றாலும் கூட, பதவிக்காலம் முடிந்தாலும் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்கிறவரை, இவர் பதவியில் தொடரலாம்.
* துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் என்ற வகையில், அந்த சபையை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.
- இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
- மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,
ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
- பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார்.
- நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தங்கர், பதவி விலகும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மாலை சந்திக்கிறார்.
வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார். நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக தன்கர் பதவியேற்கிறார்.
- பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்று ஜனாதிபதி ட்வீட்
புதுடெல்லி:
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்றும் அவரது ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.
- ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
- சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்பட வேண்டும்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
ராஜஸ்தான் இளைஞர் சங்கம் செயல்படுத்தும் புத்தக வங்கி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் கடனாக வழங்கப்படுகின்றன.
அதனை பெறும் மாணவர்கள் அந்த புத்தகங்களை இந்த ஆண்டு படித்து முடித்து பின்னர், அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,
சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.
ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்க முடியாமலோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமலே பின்தங்கி விடக்கூடாது.
தேச வளர்ச்சியின் வேகத்திற்கு மிக பெரிய உந்து சக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும், ஆக்கப் பூர்வமான ஆற்றல்களையும் பயன்படுத்தி இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் சேரும்.
அதிக மக்கள்தொகை தரும் நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் பரந்த தொகுப்பை மிக திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.
தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அதை திரும்பக் கொடுப்பதுதான் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
நம்முடையது பரந்த தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.
மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பை தமிழகம் பெற்றுள்ளது.
- அமைதியை நிலை நாட்டியதற்காக தமிழக காவல் துறையினருக்கு வாழ்த்து.
சென்னையில் நடைபெற்ற தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.
இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதோடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.
உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை.
தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும். முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம்.
மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும், தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தாய் மொழியில் கல்வி கற்பது சுயமரியாதையை அதிகரிக்கும்.
- முதன்மை நிலையில்உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்ற வேண்டும்.
ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன. தாய் மொழியில் கல்வியை கற்றுக் கொள்வது, சுதந்திரமாக தொடர்பு கொள்ள உதவும், சுயமரியாதையை அதிகரிக்கும். சொந்த கலாச்சார உணர்வை மாணவர்களுக்கு வழங்கும்.
முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைகளுக்கும் விரிவுபடுத்தவும் வேண்டும். நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது.
நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகள். உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும்.
- வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே பயணிகளின் சொர்க்கமாக திகழ்கின்றன.
நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.
நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுவை சந்தித்து கலந்துரையாடினர். அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வெங்கைய நாயுடு கூறியுள்ளதாவது:
வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.
வடகிழக்கு பகுதி சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கிடையே அடிக்கடி நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், நாட்டின் ஒற்றுமையையும். ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தக் கூடியவை.
அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் நான் அண்மையில், பயணம் மேற்கொண்டேன். அழகிய நிலப்பகுதி, செழுமையான கலாச்சாரம், மக்களின் இனிய விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாநிலங்கள் உண்மையிலேயே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டு அதன் எழில், கலாச்சாரம் ஆகியவற்றை பிற மாநில மக்கள் அனுபவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை விஷயத்தில் வடகிழக்கு பிராந்தியம் நாட்டுக்கே வழிகாட்டுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கற்றுக் கொண்டு படிப்படியாக நீடித்த விவசாயத்திற்கு மாற வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு முன்னேற்றம், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. விபத்துக்களைக் குறைக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்