search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkaiya Naidu"

    • இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
    • மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 


    ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,

    ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பை தமிழகம் பெற்றுள்ளது.
    • அமைதியை நிலை நாட்டியதற்காக தமிழக காவல் துறையினருக்கு வாழ்த்து.

    சென்னையில் நடைபெற்ற தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.

    இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதோடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.

    உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

    நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை.

    தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும். முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம்.

    மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும், தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இருந்து ஆந்திரா செல்ல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நவீன சொகுசு ரெயில் பெட்டி பொருத்தப்படுகிறது. #VenkaiahNaidu

    சென்னை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 23-ந் தேதி சென்னையிலும், ஆந்திராவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    அன்றைய தினம் சென்னையில் இருக்கும் வெங்கையா நாயுடு ஆந்திர சென்று ஸ்ரீசிட்டியில் ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக மீனம்பாக்கம் அருகில் உள்ள திரிசூலத்தில் இருந்து ரெயிலில் புறப்படுகிறார்.

    பின்னர் அங்கிருந்து சென்னை வந்து பழைய மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பள்ளியின் பிளாட்டினம் ஜியோ விழாவில் பங்கேற்கிறார்.

    இந்த விழாக்களில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம் செய்வதற்காக அவர் செல்லும் ரெயிலில் நவீன சொகுசு ரெயில் பெட்டி பொருத்தப்படுகிறது. இந்த பெட்டியில் ஸ்டார் ஓட்டல்களில் உள்ளது போன்ற மெத்தை, படுக்கை, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் ரெயிலில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #VenkaiahNaidu

    ×