search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Dam"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குரங்கணி, கொட்டக்குடி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, தேனி, லெட்சுமிபுரம், வீரபாண்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இதனால் கும்பக்கரை அருவியில் இன்று 21-வது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் அங்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. போடி அருகே உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்காக 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பூர்வீக பாசனத்துக்காக மேலும் கூடுதலாக 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்று படுகையில் உள்ள உறைகிணறுகளை நிரப்பும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 17410 கன அடி தண்ணீரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 7165 கன அடி தண்ணீரும், மதுரை மாவட்டத்துக்கு 3970 கன அடி தண்ணீரும் என 3 மாவட்டத்துக்கும் சேர்த்து 28545 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் டி.வாடிப்பட்டி, தருமத்துப்பட்டி ராமநாயக்கன்பட்டி, செக்காபட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, அணைப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், துவரிமான், மதுரை, விரகனூர், சிலைமான், திருப்புவனம், எமனேஸ்வரம், பரமக்குடி, பார்த்தீபனூர் வழியாக ராமநாதபுரம் பாசன பகுதிக்கு செல்கிறது.

    மேலும் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள முட்செடிகள், அமலைச் செடிகள் ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டு பூர்வீக பாசனத்துக்காக தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 67.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 2477 கன அடி. நீர் திறப்பு 6099 கன அடி. நீர் இருப்பு 5238 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது. நேற்று 133.75 அடியாக இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1284 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4118 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5843 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 என முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 331 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    பெரியாறு 30.4, தேக்கடி 38.4, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 9.2, சண்முகாநதி அணை 18.6, போடி 47.8, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 40, பெரியகுளம் 29, வீரபாண்டி 46, அரண்மனைப்புதூர் 27, ஆண்டிபட்டி 17.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த 9ம் தேதி 71 அடி உயரம் கொண்ட அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 70 அடியில் நிலைநிறுத்தி வந்தனர். 10ம் தேதி மேலூர், கள்ளந்திரி மற்றும் 15ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி உள்பட அணையிலிருந்து 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. அணைக்கு 2001 கனஅடி நீர் வருகிறது. அணையி லிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 140 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
    • போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை:

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் இருந்தபோதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை கிடைத்து வருகிறது. வருசநாடு, சதுரகிரி மலை பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. நேற்று நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதனால் வைகை ஆறு செல்லும் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து மொத்தம் 769 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.

    ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இருந்தபோதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 4-ந்தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியபோது கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    அதன்பின்னர் 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2596 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 5908 மி.கன அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்கள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 45 நாட்களுக்கு 900 கன அடி வீதமும் அதன்பின்பு 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த அணை நீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் தண்ணீர் வெளியேறிய இடத்தில் விவசாயிகள் மலர்களைத்தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஷஜீவனா (தேனி), சங்கீதா (மதுரை), பூங்கொடி (திண்டுக்கல்), எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், வெங்கடேஷ், சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக உள்ளது. வரத்து 1859 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4504 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடி. அணைக்கு வரும் 400 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதால் வராகநதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு 2, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.6, சண்முகாநதி அணை 2, போடி 72, வைகை அணை 32, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 6, வீரபாண்டி 6.4, அரண்மனைபுதூர் 15.2, ஆண்டிபட்டி 23.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கள்ளந்திரி-திருமங்கலத்துக்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி இருப்பினும் தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைய வாய்ப்புள்ளது என நீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    மேலும் அணைக்கு நீர்வரத்து 2,693 கன அடியாகவும், வெளியேற்றம் 69 கன அடியாக உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறில் வினாடிக்கு 1,855 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 127 அடியாக உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் குறிப்பாக மேலூர், பேரணை,கள்ளந்திரி, திருமங்கலம், 58 கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது ஒரு நியாயமான கோரிக்கை தான்.

    கள்ளந்திரி பகுதியில் 45,000 ஏக்கர் இரு போக பாசனத்திற்கும், மேலூர் பகுதியில் 86,000 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும், திருமங்கலம் 19,500 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க விவசாயி கள் கோரிக்கை வைத்துள் ளனர்.

    வைகையில் 6000 கன அடி தண்ணீர் இருக்கும் பொழுது கள்ளந்திரி, மேலூர் போன்ற பகுதிக ளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 9000 கன அடி உள்ளது. அதனால் கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம், 58 கால்வாய் ஆகியவற்றிக்கு சேர்த்து தண்ணீரை திறந்து விடலாம். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டியதும் முதல் எச்சரிக்கையும், 68 அடியை எட்டியதும் 2-ம் எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் நேற்று 69 அடியை நெருங்கியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    வழக்கமாக அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியதும், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். ஆனால் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக நாளை (10-ந்தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    இதன் காரணமாக உபரி நீரை வெளியேற்றாமல் நீர் மட்டத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 2705 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால் இன்று எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஏற்கனவே வைகை கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 2230 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4352 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.20 அடி, வரத்து 232 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 379 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 127 அடி. அணைக்கு வரும் 243 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.

    பெரியாறு 7, தேக்கடி 14.2, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 7.8, சண்முகாநதி அணை 21.6, போடி 22, வைகை அணை 25.6, மஞ்சளாறு 32, சோத்துப்பாறை 32, பெரியகுளம் 21, வீரபாண்டி 42.5, அரண்மனைப்புதூர் 23.2, ஆண்டிபட்டி 76.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 1, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 6.2, சண்முகாநதி அணை 14, போடி 2.3, வைகை அணை 30.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 10, பெரியகுளம் 12, வீரபாண்டி 3.8, அரண்மனைப்புதூர் 26.8, ஆண்டிபட்டி 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கொட்டக்குடி, வராக நதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கு வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி அதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 125.85 அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரே அடி உயர்ந்து 126.85 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 980 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 2605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4018 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 412 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 5-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 35.2, தேக்கடி 46, கூடலூர் 21.2, உத்தமபாளையம் 50.4, சண்முகாநதி அணை 16, போடி 21.3, மஞ்சளாறு 10.4, சோத்துப்பாறை 52, வைகை அணை 23.4, பெரியகுளம் 14, வீரபாண்டி 21.8, அரண்மனைப்புதூர் 12.2, ஆண்டிபட்டி 61.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 47 அடியாக குறைந்திருந்தது. அதனைதொடர்ந்து அரசரடி, வெள்ளிமலை, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேலும் கனமழை தொடர்ந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் உயர்ந்து 6458 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் திடீர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 66 அடியை கடந்ததால் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், அதனைதொடர்ந்து 69 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாக உள்ளது. அணைக்கு 1616 கனஅடிநீர் வருகிறது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 அடியாக உள்ளது. வருகிற 462 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 4.6, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 26.6, சண்முகாநதி அணை 14.2, போடி 100.2, வைகை அணை 8, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 51, பெரியகுளம் 55, வீரபாண்டி 107, ஆண்டிபட்டி 15.6, அரண்மனைப்புதூர் 37.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொட்டக்குடி ஆகியவை மூலம் அணைக்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வைகை அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு முதல் மற்றும் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 58.14 அடியாக உயர்ந்து ள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு 1445 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.65 அடியாக உள்ளது. 1189 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1322 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 123.98 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. வரத்து 1180 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3172 மி.கனஅடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது. வரத்து 1442 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2849 மி.கனஅடி.

    57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 112 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

    126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழுகொள்ள ளவை எட்டி வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 117.75 அடியாக உள்ளது. வரத்து 66 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 86.12 மி.கனஅடியாக உள்ளது.

    கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் பெய்துவரும் ெதாடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 6.4, தேக்கடி 39, கூடலூர் 4.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.4, வைகை அணை 7, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 6, பெரியகுளம் 3, அரண்மனைப்புதூர் 14.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×