search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சளாறு அணை"

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு மற்றும் அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பருவமழையின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போது ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

    இதுவரை அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றிரவு 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கு 1230 கனஅடிநீர் வருகிறது. இன்றுமுதல் அணையிலிருந்து நீர்திறப்பு 1300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது. அணைக்கு 1906 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2149 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 137 கனஅடி.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    • முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பி காணப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளா, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் இதே அளவில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 139.85 அடியாக உள்ளது. அணைக்கு 2023 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 140 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் 14 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். எனவே வண்டிபெரியாறு, சப்பாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பெரியாற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது 142 அடியை எட்டினால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் 6-வது முறையாக இந்த அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக வைகை அணையும் நிரம்பி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2187 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 2319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகையாற்றில் இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 122 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 176.97 கனஅடி. தேக்கடி 1.2, கூடலூர் 0.4, உத்தமபாளையம் 1, சண்முகாநதி 0.8, போடி 0.2, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக போடி அணைப்பிள்ளையார் அருவி, சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை சுவர் மூடியதால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அறுவடை செய்த நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் சிரமபட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.55 அடியாக உள்ளது. வரத்து 2346 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4600 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. வரத்து 1916 கன அடி. திறப்பு 892 கன அடி. இருப்பு 5338 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் இன்று தேக்கப்பட உள்ளது. அணைக்கு வினாடிக்கு 644 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளவை எட்டி 121.68 அடியில் உள்ளது. வரத்து 28 கன அடி. இருப்பு 92.42 மி.கன அடி.

    தொடர் மழை காரணமாக போடி அணைப்பிள்ளையார் அருவி, சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக அனைத்து மகளிர் போலீஸ் நிலைய காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக அந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அருகில் உள்ள மற்றொரு காம்பவுண்ட் சுவரும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை சுவர் மூடியதால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இதனை அகற்றி கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்கவும் சேதம் அடைந்த மற்றொரு சுவரை இடிக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு 1.8, தேக்கடி 7.4, கூடலூர் 16.2, உத்தமபாளையம் 9.6, வீரபாண்டி 10, வைகை அணை 8, மஞ்சளாறு 10.6, சோத்துப்பாறை 37, ஆண்டிபட்டி 25, அரண்மனைபுதூர் 13.4, போடி 25.2, பெரியகுளம் 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 56.20 அடியை எட்டியுள்ளது.
    • முழு கொள்ளளவை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல், பெருமாள் மலை, பூலத்தூர், சாமக்காடு, பாலமலை, அடுக்கம், பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கடந்த மாதம் 45 அடியில் இருந்த மஞ்சளாறு அணை நீர் மட்டம் இப்பகுதியில் பெய்த மழையால் சீராக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர் மட்டம் 53.20 அடியை எட்டியதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை முழு கொள்ளளவான 57 அடியில் 56.20 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு பகுதி மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் மஞ்சளாற்றை கடக்க வேண்டாம். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    அணை நிரம்பியதால் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணைக்கு போதிய அளவு பஸ் வசதி இல்லை. மேலும் இதனை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். வைகை அணையில் உள்ளது போல் சிறுவர் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×