search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசனத்திற்கு தண்ணீர் திறப்பால் வேகமாக சரியும்  வைகை அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்

    பாசனத்திற்கு தண்ணீர் திறப்பால் வேகமாக சரியும் வைகை அணை நீர்மட்டம்

    • தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த 9ம் தேதி 71 அடி உயரம் கொண்ட அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 70 அடியில் நிலைநிறுத்தி வந்தனர். 10ம் தேதி மேலூர், கள்ளந்திரி மற்றும் 15ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி உள்பட அணையிலிருந்து 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. அணைக்கு 2001 கனஅடி நீர் வருகிறது. அணையி லிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 140 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×