search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transportation"

    • பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் (ஸ்டிரைக் நோட்டீஸ்) செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 526 டிரைவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பணி ஒதுக்க முயற்சி நடந்தது. இதையறிந்த பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    இதற்கிடையே ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 31-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் மாநகர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதனால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    4-வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    • மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன

    . இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    • பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை அனல் காற்றுடன் கடுமையான வெப்பநிலை இருந்தது. அதைத்தொடர்ந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர், பாடாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரவலான மழை பெய்தது. பல இடங்களில் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பலத்த காற்று வீசியதால் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை சரிசெய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த புளிய மரத்தின் கிளைகளை மோட்டார் எந்திரங்கள் உதவியுடன் அறுத்து அகற்றி, கிளைகளை அப்புறப்படுத்தினர்.

    • மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

    சென்னை:

    அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திர உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் துரிதமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வ லர்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர்.

    மேலும் சாலையோ ரத்தில் காய்ந்து பட்டுப்போன நிலையில் இருந்து வரும் மரங்களை அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் துறை சார்ந்த அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
    • துணைமேயரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சாலை உள்ளது.இங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு அங்கு போக்குவரத்து சாலை சமன்படுத்தப்பட வில்லை.

    எனவே அங்கு ரோடுகள் மேடும்- பள்ளமுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இன்று காலை, மாமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள போக்குவரத்து சாலையில் மேடு- பள்ளங்கள் இருப்பது தெரியவந்தது.

    எனவே துணை மேயர் உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அதன்பிறகு அவர் செல்போன் மூலம், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துணை மேயர் போக்குவரத்து சாலையில் மேடு பள்ளம் தொடர்பாக, அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கியது. சாலை சீரமைக்கப்பட்ட பிறகுதான் அவர், சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணைமேயரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்த னர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது
    • கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார்

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனை பொருட்படுத்தாமல் கடமையை செவ்வென செய்யும் போலீசாருக்கு, உடல் வெப்பத்தை தணித்து, உடல்நிலையை காக்கும் விதமாக விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு, விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோ க்கியராஜ் கோடை வெயிலை தணிக்கும் தொப்பிகளை அணிவித்தும், உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் வகையில் பழச்சாறு மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.

    மேலும் கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் மற்றும் விருத்தாசலம் நகர போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.கழ்ச்சி

    • பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
    • நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திாியை முன்னிட்டு 10-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலா் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் கவிதா பாண்டியன், வா்த்தக சங்க தலைவா் செந்தில்குமாா், முன்னாள் நகர்மன்ற தலைவா் பாண்டியன், நாட்டியாஞ்சலி விழாக்குழு செயலாளா் ராஜா, தலைவா் செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அருண் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நாட்டி யாஞ்சலி விழாக்குழு அமைப்பு செயலாளா் எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவே ற்றார்.

    கூட்டத்தில் நாட்டியா ஞ்சலி விழாவில் கலந்து கொள்ளும் பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    அண்ணாசிலையில் இருந்து போிக்காடு அமைத்து மேலவீதியில் போக்குவரத்து தடைசெய்து பக்தா்களுக்கும், நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து வாகனங்களையும் வடக்கு, கீழ, தெற்கு வீதி வழியாக போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    சன்னதி தெருவில் உள்ள கடைகளை சிவராத்திாி அன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு முழுவதும் அடைத்து விழா நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் நாட்டியாஞ்சலி விழாக்குழு பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    பெரம்பலூர்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் விடுமுறை முடிந்ததால் நேற்று புறப்பட தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தவர்களும் நேற்று புறப்பட்டனர்.

    இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நேற்று கார், ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவற்றில் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பி சென்றவாறு இருந்தனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது. இதில் சிறுவாச்சூரில் மேம்பால பணி நடப்பதாலும், திருமாந்துறை சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.


    • காவேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றபட்டுள்ளது
    • திருச்சி மாநகரப் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

    திருச்சி:

    பொங்கல் பண்டிகையின் தொடா் விடுமுறையால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகிறது. இதனால், அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது.

    இந்நிலையில், திருச்சி மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில் பொங்கலுக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து பேருந்துகள், காா்கள், லாரிகள் அனைத்தும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். அவசர ஊா்திகள் அனைத்தையும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக அனுப்பி, சஞ்சீவி நா் சந்திப்பில் தாற்காலிக திறப்பை

    ஏற்படுத்தி அதன் வழியாக அனுமதிக்கப்படும். அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் சூழலில், சென்னை-திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தையும் சஞ்சீவி நகா் பகுதியில் திரும்ப அனுமதிக்காமல், நேராகச் சென்று பால் பண்ணை வழியாக திரும்பி வர அனுமதிக்கப்படும். தேவையான இடங்களில் கல்லூரி மாணவா்களின் என்சிசி, என்எஸ்எஸ் பிரிவு, ஊா்க்காவல் படை, போக்குவரத்து வாா்டன் ஆகியோரை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்து பணி மேற்கொள்ளப்படும்.

    சஞ்சீவிநகா், ஓயாமரி சாலை, தேசிய நெடுஞ்சாலை-38, புறவழிச் சாலை, கொண்டையம்பேட்டை அணுகுசாலை, கொண்டயம்பேட்டை சந்திப்பு, கல்லணை சாலை ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்ப்படும் என மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகரம், கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு, திருவரங்கம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் பொங்கல் பண்டிகை நாள்கள் முடியும் வரையில் (வரும் 17-ந் தேதி வரை) கூடுதல் கவனத்துடன் பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    • போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
    • மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடைகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்குமாறு கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவது வாடிக்கையானது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் சமயபுரம் வாரச்சந்தை, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி திருமண மண்டப பகுதியில் நிறுத்தி வைத்தனர்.

    இந்த மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும். மீண்டும் இதேபோல் சாலைகளில் சுற்றித்திரிந்து மாடுகள் பிடிபட்டால் ரூ.5,000 அபராதமாக செலுத்திய பிறகே மீட்கலாம். அதற்கு பின்னரும் சாலைகளில் வலம் வந்தால் அந்த மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×