என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "therapy"
- வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.
இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
- வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்
. திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம், நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, தலைமை வகித்து முகமை தொடங்கி வைத்தார். நல்லூர் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த சிறப்பு கால்நடை முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் , கன்றுகுட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டன.
முகாமில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட விவசாயி களுக்கு விருதுகளையும் வழங்கினார். முகாமிற்கு பாமகவுண்டம்பாளையம், பொதிகை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். முகாமில் ஊராட்சித் துணைத் தலைவர், வாழ் உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
- கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்யானை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார்.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.
இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்