என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல்
- வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.
இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்