search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the kerala story"

    • இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    ஆனாலும் இதையும் மீறி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று வரைக்கும் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள். படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இயக்குனர் சுதிப்தோசென் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை எடுத்தார்.
    • இதில் கேரளாவில் இருந்து இந்து, கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுதீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

    கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்ற சில இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது.

    இந்த தகவலின் அடிப்படையில் இயக்குனர் சுதிப்தோசென் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை எடுத்தார். இதில் கேரளாவில் இருந்து இந்து, கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு, அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


    இதற்கு கேரளா, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். என்றாலும் எதிர்ப்பை மீறி கடந்த 5-ந் தேதி இந்த படம் நாடு முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை எனப்படும் கே.சி.பி.சி.யின் செய்தி தொடர்பாளர் பாதிரியார் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறியதாவது:- 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை திரைக்கதை எழுதியவரின் கலையாகவே பார்க்க வேண்டும். இந்த படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும், அவர்களின் அமைப்பும் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி உள்ளது. எனவே இதனை வகுப்பு வாதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.



    கேரளாவில் காதல் வலையில் பெண்களை சிக்க வைத்து அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்ட உண்மையை மறுக்க முடியாது. ஆனால் காதல் திருமணத்திற்கு பிறகு கட்டாய மதமாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரவு அளித்திருப்பது கேரளா வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு மறைமுக தடை தொடர்கிறது.
    • திரைப்படத்தால் பொது ஒழுங்கு கெடும், பொது அமைதி கெடும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

    மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி, திரைப்படம் வெளியான நாளில், வன்முறை சம்பவங்களை தடுக்கவும் இத்தடையை விதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். திரைப்படம் மூன்று நாட்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் திரையிட்ட பிறகு தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு மறைமுக தடை தொடர்கிறது. எனவே, திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    மேற்கு வங்க அரசின் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். இதை சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாததற்கான காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திரைப்படத்தால் பொது ஒழுங்கு கெடும், பொது அமைதி கெடும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது என வாதிட்டார்.

    அப்போது தலைமை நீதிபதி, திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டு உள்ளது. திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு ஏன் தடை விதிக்க வேண்டும். மேற்கு வங்க மாநிலம் நாட்டில் பிற பகுதிகளைக் காட்டிலும் வேறுபட்ட ஒன்றல்ல. திரைப்படம் பார்க்க வேண்டிய படம் இல்லை என பொதுமக்கள் நினைத்தால் அவர்கள் பார்க்கப்போவதில்லை. திரைப்படத்தை ஏன் தடை செய்ய வேண்டும்? என கேட்டார்.

    இதற்கு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, திரைப்படத்தை பார்த்த பிறகு பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் என்று கருதியதால், சட்டப்படி தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, திரைப்படத்தை தமிழ்நாடு தடை செய்யவில்லை என்பதால் பதில் அளிக்க தேவையில்லை. திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.

    இதற்கு நீதிபதிகள், திரையரங்கு பாதுகாப்புக்கு எந்த மாதிரியான நிர்வாக ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். தியேட்டர்கள் தாக்கப்படும்போதும், இருக்கைகள் எரிக்கப்படும்போது மாநில அரசு கண்டும், காணாமல் இருக்க முடியாது என தெரிவித்ததுடன், ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்க அரசு, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மே 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி கேரளா ஸ்டோரி படம் அப்பாவி இந்துப் பெண்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதை துணிச்சலாக விளக்கமாக காட்டுவதாக கூறி உள்ளனர்.
    • பெண்கள் மதம் மாறிய பிறகு எப்படி சித்ரவதையை எதிர் கொண்டார்கள் என்ற நிஜ வாழ்க்கை கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

    புதுடெல்லி:

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேசம் போன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு ஆதரவாக பா.ஜனதா நிர்வாகிகள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சிலரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பேசுவது போன்ற வீடியோ நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.

    அந்த வீடியோவில், இந்த படம் அப்பாவி இந்துப் பெண்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதை துணிச்சலாக விளக்கமாக காட்டுவதாக கூறி உள்ளனர்.

    மேலும், இந்த பெண்கள் மதம் மாறிய பிறகு எப்படி சித்ரவதையை எதிர் கொண்டார்கள் என்ற நிஜ வாழ்க்கை கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

    இது குறிப்பிட்ட எந்த மதத்தையும் குறி வைக்கவில்லை. ஆனால் புள்ளி விபரப்படி பேசினால், முஸ்லிம் மக்கள் தொகை 35 மில்லியனிலிருந்து 172 மில்லியனாகவும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 28 மில்லியனாகவும் வளர்ந்துள்ளது. ஆனால் இந்து மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

    இதற்கான மூல காரணம் என்னவென்றால் பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது. நீங்களும் உங்கள் அடுத்த தலைமுறையினரும் இந்து மதத்தைப் புரிந்து கொள்வது முக்கியம்.

    சுவாமி, நித்யானந்தா பரமசிவம் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்காக பிரத்யேகமாக 21 நாட்களை வடிவமைத்துள்ளார்.

    இந்து மதத்தின் சிறந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுங்கள். இந்து மதத்தின் மிகவும் உண்மையான மற்றும் அறிவியல் அனுபவம் கிடைக்க வருகிற 15-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் சேரவும் என பெண் சீடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. நடந்தது உண்மையா அல்லது கற்பனையா என்பதைத்தாண்டி ஒரு கதையாக இந்தப்படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது.


    தி கேரளா ஸ்டோரி

    இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று பேசியிருக்கிறார்.

    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படம் இன்று 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியானது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.



    இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்' திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 -ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ‘கேரளா ஸ்டோரி’ படம் கடும் எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது.
    • தமிழகத்தில் ஒருநாள் மட்டும் இந்த படம் திரையிடப்பட்டது.

    சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இதில் அடா ஷர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.

    கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் 32 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்புகளுக்கிடையே இந்த படம் கடந்த 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது.

    தமிழகத்தில் ஒருநாள் மட்டும் இந்த படம் திரையிடப்பட்டது. சென்னையில் 13 திரையரங்குகளில் வெளியானது. கடும் எதிர்ப்பு காரணமாக மறுநாளே இந்த படம் தமிழகத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

    ஆனால் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று திரையிடப்பட்டது.

    இது தொடர்பாக நடிகை அடா ஷர்மா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "எங்கள் படத்தை பார்க்கப்போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை டிரெண்ட் செய்பவர்களுக்கும், என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.


    அடா சர்மா பதிவு

    இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை (மே 12) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    திருப்பூர் :

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடக் கோரி இந்திய ஜனநாயக பேரவை அறக்கட்டளை சாா்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து அறக்கட்டளையின் மாநில இளைஞரணித் தலைவா் ஏ.அம்ஜித் அசோக், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியள்ளதாவது:- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    இந்த திரைப்படத்தின் மூலமாக அனைத்து பெண்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படும். ஆகவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இந்த திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.


    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன.
    • ‘தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    மும்பை :

    இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

    கேரளாவில் மாயமான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போல படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த சினிமா திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொதுமக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பா.ஜனதா தலைவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மும்பையை சேர்ந்த பா.ஜனதா மந்திரிகள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், எம்.எல்.ஏ.க்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக 'தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.

    • எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள்
    • உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    புதுடெல்லி :

    பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர்களுக்காக தீர்மானிக்க முடியாது" என கூறி உள்ளார். இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் குஷ்பு, 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தமட்டில், எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்? உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×