search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannah"

    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவின் திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள். #Tamannah
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இளம் நடிகர்கள் அனைவருடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

    இவர் ‘பாகுபலி’ படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் 2ம் பாகத்தில் சிறிய கதாபாத்திரம் என்பதால் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழில் உதயநிதி ஜோடியாக ‘கண்ணே கலைமானே’, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். 



    தமிழ், தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட மறுக்கும் தமன்னா, தற்போது கன்னடத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்துள்ளார். கன்னட முன்னணி கதாநாயகன் யாஷ் நடிக்கும் கே.ஜி.எப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். தமன்னா தோன்றுவதால் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
    ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டரா என்று தனது திருமணம் பற்றிய வதந்திக்கு ஆவேசமாக கூறியிருக்கிறார் தமன்னா. #Tamanna
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் விரைவில் டாக்டர் ஒருவரை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. 

    இதையறிந்த தமன்னா, தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவரை தேடி கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

    நான் இப்போது மகிழ்ச்சியாக தனியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோரும் மாப்பிள்ளை தேடும் படலத்தில் இல்லை. இப்போதைக்கு என் காதல் எல்லாம் என்னுடைய சினிமா பணிகள்தான். நான் பட ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கும் போது எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.



    இது மரியாதைக் குறைவானது. நான் எப்போது அந்தப் பாதையில் செல்வேன் என்பதை நானே உலகிற்கு அறிவிப்பேன். திருமணம் புனிதமானது. எனவே, இது பற்றி இத்தனை யூகங்கள் தேவையில்லை. நான் மீண்டுமொருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.

    என் திருமணம் இப்போதைக்கு இல்லை, இவை அனைத்தும் யாரோ ஒருவரது கற்பனையாகும். வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமன்னா பதிவு செய்திருக்கிறார். #Tamannah
    கண்ணே கலைமானே படத்தை அடுத்து பிரபல நடிகருடன் தமன்னா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Tamannah
    தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்தை பார்த்திபன் இயக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    பிரபுதேவா - தமன்னா கூட்டணியில் ஏற்கனவே ‘தேவி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை விஜய் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
    நடிகர் அஜித், தான் நடித்த படங்கள் வெளியாகும் முன்பு என்ன செய்தாரோ, அதை இயக்குனர் சீனு ராமசாமியும் தற்போது செய்திருக்கிறார். #Ajith #SeenuRamasamy
    சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காகவும், வெற்றி பெறவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செய்துள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் சென்றுள்ளார்.



    நடிகர் அஜித்தும், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். வீரம் படம் வெளியாகும் முன்பு திருப்பதில் முடி காணிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    `சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சௌந்தரராஜாவுக்கும், தொழிலதிபர் தமன்னாவுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. #SoundaraRaja #Tamanna
    `சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ஜிகர்தண்டா', `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', `தங்கரதம்', `தர்மதுரை', `ஒரு கனவு போல', `திருட்டுப்பயலே 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

    மேலும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ஈடிலி', `கடைக்குட்டி சிங்கம்' படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும்  சௌந்ததராஜாவுக்கும், க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் மதுரை அருகே உசிலம்பட்டியில் வைத்து திருமணம் நடந்தது.



    திருமணமத்தில் குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #SoundaraRaja #Tamanna

    ×