search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannah"

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள தேவி-2 படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “எனது படங்கள் நன்றாக ஓடினால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லோரும் லாபம் அடைவார்கள். அதை பார்த்து நான் சந்தோஷப்படுவேன்.

    அதே மாதிரி நான் நடிக்காத படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். சினிமா துறை நன்றாக இருக்க வேண்டுமானால் எல்லா படங்களுமே ஓட வேண்டும்.



    சினிமா துறை செழிப்பாக இருந்தால்தான் அனைத்து நடிகர், நடிகைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சினிமா துறையில் வெற்றிகள் ரொம்ப முக்கியம். 100 படங்கள் வெளிவந்தால் அவற்றில் 10 படங்கள் கூட வெற்றிபெறுவது இல்லை. இது வருத்தமளிக்கும் விஷயம். போட்டியில் ரசிகர்கள் பாராட்டை பெறுவதும் சுலபமானது இல்லை. 

    இந்த மாதிரி சூழ்நிலையில் ஒவ்வொரு படமும் வெற்றி பெறுவது முக்கியம். ஜெயித்த படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்று பார்க்க மாட்டேன். எந்த படம் வெற்றி பெற்றாலும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா எனது துறை. இங்கு தனியாக யாரும் வளர முடியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது” இவ்வாறு தமன்னா கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, அடுத்ததாக நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

    `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

    தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். 



    அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். அதுபோல் தமன்னாவுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்? என்பது, இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’ என்றார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தாலும், பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். #Tamannah
    தமன்னா கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். பாகுபலி படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிக்க மாட்டார். அது முத்தக்காட்சி. உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பதை மட்டும் தவிர்த்து விடுகிறார். அப்படியொரு காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டால் யாருடன் நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

    எந்த நடிகருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று தமன்னாவிடம் கேட்டபோது?’ இந்தி நடிகர் விக்கி கவு‌ஷல் உடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். விக்கி கவு‌ஷல் இந்தி பட இயக்குனர் ஷாம் கவுசலின் மகன். ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தமன்னாவுக்கு இந்தி பட உலகில் வலம் வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது.



    தற்போது காமோஷி என்ற இந்தி படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் வெளிவர தாமதமாகிறது. பாலிவுட் வட்டார இயக்குனர்கள், நடிகர்களின் கவனத்தை கவரவே அடிக்கடி இந்தி நடிகர்கள் பற்றி தமன்னா பேசி வருவதாக கூறப்படுகிறது.
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்து பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். #VijaySethupathi #Udhayanidhi
    ‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும் எடுத்து வருகிறார். யுவன்‌ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார்.

    அதுமட்டு மல்லாமல், இந்தப் படத்தின் இசைக்காக யுவனுடன் இளையராஜா, கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கைகோர்த்துள்ளனர். தேனியில் பரபரப்பாகப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்துள்ளார். உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.



    படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண் கலங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
    நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Tamannah
    தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே, தேவி 2 படங்கள் வெளியாக உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சரியான வாய்ப்புகள் வராததால் தான் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானதாக செய்தி பரவியது.

    ஐதராபாத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமன்னா ’சினிமாவில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு நடனத்தால் தான் முக்கியத்துவம் கிடைத்தது. ஆனால் நடிகைகளுக்கு அவர்களது நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது.



    ஆனால் நான் மட்டுமே பிரதானமாக இருக்கும் விசே‌ஷமான பாடல்களில், எனது நடனத் திறமையைக் காட்ட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது’. இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
    வேலூரில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை தமன்னா, நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Tamannah
    வேலூரில் நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆரணி சாலை வழியாக போக்குவரத்தை போலீசார் மாற்றி விட்டனர்.

    இதைத் தொடர்ந்து தமன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் வெளியாகிறது. இதை அடுத்து ‘தேவி 2’, ‘மகாலட்சுமி’ உள்பட பல படங்கள் வெளியாக உள்ளது. நல்ல படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் அந்த படம் ஓடாது. சினிமாவில் எனக்கு போட்டியாக யார் உள்ளார்கள் என்று கேட்டால், எல்லா துறைகளிலும் போட்டி உள்ளது. அதுபோல் தான் சினிமாவும். போட்டி நல்லது தான். போட்டி காரணமாக தான் நாங்கள் நல்ல படங்களில் நடிக்க முடிகிறது.

    பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். அதை ஓரளவுக்கு தர்மதுரை படம் நிவர்த்தி செய்துள்ளது. இனி வெளியாகும் படம் இன்னும் அதை ஒரு படிக்கு மேல் கொண்டு போகும். அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எப்போது எனது திருமணம் என்று கேட்கிறார்கள். நீங்களே எனக்கு நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்றார்.



    விழா முடிந்ததும் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி, தமன்னாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பொதுமக்கள் மற்றும் உங்களது ரசிகர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 

    அதை ஏற்றுக்கொண்ட தமன்னா, வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், சீட் பெல்ட் கட்டாயம் போட வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் என்றார். பின்னர் அவர் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். 
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். #KannaeKalaimaanae
    ‘தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்' மூலம் தயாரித்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஜலேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படத்தின் சிங்கிள் டிராக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    இப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KannaeKalaimaanae
    ஸ்கெட்ச் படத்திற்குப் பிறகு எந்தப் படமும் வெளியாகாமல் இருந்த தமன்னாவின் கைவசம் தற்போது பல படங்கள் இருக்கிறது. #Tamannah
    ஜனவரி மாதம் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்துக்குப் பின் தமன்னா நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகவில்லை. ஆனால், அவர் கைவசம் தற்போது சுமார் பத்து படங்கள் வரை உள்ளன. கத்திச் சண்டை படத்திற்குப் பின் விஷால், தமன்னா இணைந்து நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார். 

    ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இதே கூட்டணியில் மதகஜராஜா திரைப்படம் உருவாகி வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கஉள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இதைத் தயாரிக்கிறார். 

    சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னா கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தேவி 2 படமும் உருவாகி வருகிறது. தெலுங்கில் குயின் படத்தின் ரீமேக்கான தட் இஸ் மகாலட்சுமி உட்பட 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு தமன்னா நடிப்பில் பல படங்களை எதிர்பார்க்கலாம்.
    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் தமன்னாவை இயக்குனர் விஜய் பாராட்டியுள்ளார். #Tamannah #Vijay
    பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாக நடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ் பாராட்டுகளை குவித்தது. 

    தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பிய தமன்னாவை விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பியுள்ளது. 



    இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்று விஜய் வாழ்த்தியுள்ளார்.
    ‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து, மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tamannah
    தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இப்படத்தை அடுத்து விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. விஷால் தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முடிந்த பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. நடிகை தமன்னா இதற்குமுன் ‘கத்தி சண்டை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #Tamannah
    தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா பாகுபலி படத்துக்கு பிறகு திறமையான நடிகை என்று பெயர் எடுத்தார். இப்போது சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி என்ற இன்னொரு சரித்திர படத்திலும் நடிக்கிறார். அதோடு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

    இதற்கு பதில் அளித்து தமன்னா கூறியதாவது:–

    ‘‘நான் சினிமா உலகுக்கு வந்து 10 வருடங்கள் தாண்டிவிட்டது. இத்தனை காலம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நீங்கள் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது ஏன்? அப்படி ஆடாதீர்கள் என்று பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நடனம் என்பது எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கிறது. 



    இந்த அளவுக்கு நான் உயர்வதற்கு நடனத்தோடு சேர்ந்த நடிப்பும் காரணம். பெரிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பது இல்லை. குறைவான காட்சிகளே அவர்களுக்கு கொடுப்பார்கள். அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது கஷ்டம். அந்த நடிப்பை மட்டும் வைத்து ரசிகர்களை நமது பக்கம் இழுக்க முடியாது. 

    எனவேதான் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நடனம் மூலமாக ரசிகர்களை எனது பக்கம் இழுத்தேன். ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாலும் மறுப்பது இல்லை. எனது உடல் எடை கூடாதது குறித்தும் பேசுகிறார்கள். நான் பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ஆனாலும் அளவோடு சாப்பிடுகிறேன்.’’

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவின் திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள். #Tamannah
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இளம் நடிகர்கள் அனைவருடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

    இவர் ‘பாகுபலி’ படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் 2ம் பாகத்தில் சிறிய கதாபாத்திரம் என்பதால் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழில் உதயநிதி ஜோடியாக ‘கண்ணே கலைமானே’, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். 



    தமிழ், தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட மறுக்கும் தமன்னா, தற்போது கன்னடத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்துள்ளார். கன்னட முன்னணி கதாநாயகன் யாஷ் நடிக்கும் கே.ஜி.எப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். தமன்னா தோன்றுவதால் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
    ×