search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanne Kalaimaane"

    `கண்ணே கலைமானே' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KanneKalaimaane #SeenuRamasamy
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, சர்ஜூன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது விக்ரம் ஸ்ரீதரன் இயக்க அஷோக் செல்வன் நடிக்கும் `ரெட் ரம்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    டைம்லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #KanneKalaimaane #SeenuRamasamy #SundarAnnamalai #TimeLineCinemas

    உதயநிதி ஜோடியாக கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ள தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், கிசுகிசுக்கள் படிப்பது தனக்கு பிடிக்கும் என்று தமன்னா கூறியுள்ளார். #Tamannaah
    கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவின் வேடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தமன்னாவை உற்சகாப்படுத்தி உள்ளது. இடையில் அவருக்கு படங்களே இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்தன.

    இதுபற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் ‘நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என் கதை முடிந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு அதில் இருந்து அதிக உற்சாகம் கிடைக்கும்.



    ஏனென்றால் அப்போது நான் ஒரு புதுமுகம் போல உணர்வேன். அது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். நானும் உழைப்பேன். அப்படி இதற்குமுன் அப்படியான தோல்வி முகத்தில் நான் இருந்தபோது தான் ‘பாகுபலி’ வாய்ப்பு வந்தது. ஒரு நடிகையாக நடிப்பு வாழ்க்கை போதும் என்று நான் நினைக்கும்போது தான் எனது தொழில் வாழ்க்கை முடியும். எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வு இல்லை என்று கூறி இருக்கிறார். #Tamannaah #KanneKalaimaane

    கண்ணே கலைமானே படம் ரிலீசாகி இருக்கும் நிலையில், தமன்னா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி பற்றி அவர் கூறும் போது, அவர் பயங்கரமான ஆளு, இயற்கையான நடிகர் என்றார். #KanneKalaimaane #Tamannaah
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கெண்டிருக்கிறது. இந்த நிலையில், மாலைமலர் இணையதளத்திற்கு தமன்னா அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது,

    சீனு ராமசாமி பற்றி?

    சீனு ராமசாமி சார் ஒரு தேசியவாதி. வேறு நாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பெண்ணியத்தை மதிப்பவர். அவருடைய படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.



    தமிழ் பையன தான் கல்யாணம் பண்ணவேன்ணு சொன்னீர்களே?

    நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழி, சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இருக்க வேண்டும்.


    உடன் நடித்த நடிகர்கள் பற்றி கேட்ட போது அவர் கூறிய பதில்களாவன, 

    விஜய் சேதுபதி - இயற்கையான நடிகர். அவர் மட்டும் எப்படி இயற்கையாக இருக்கலாம். அவருடன் நடிக்க பயமாக இருக்கும். எனக்கு பிடித்த நடிகர்களுள் அவரும் ஒருவர். அவர் நடிப்பதே தெரியாது, அந்த அளவுக்கு சிறந்த நடிகர். மணிரத்னம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். பயங்கரமான நடிகர்.

    கார்த்தி - கார்த்தியுடன் 3 படம் நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புபவர். 

    விஜய் - ரொம்ப அமைதியாக இருப்பார். 

    அஜித் - குடும்ப மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு சமைத்து கொடுப்பார். 

    பிரபாஸ் - பாகுபலி, உண்மையான பாகுபலி. இரக்க குணமுடையவர். பலமானவர். 

    இவ்வாறு கூறினார். #KanneKalaimaane #Tamannaah #UdhayanidhiStalin #VijaySethupathi

    புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால், சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன் என்று நடிகை வசுந்தரா கூறினார். #Vasundara #KanneKalaimaane
    பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த வசுந்தரா அடுத்து விக்ராந்துடன் பக்ரீத் படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி...

    பக்ரீத் படம் பற்றி?

    ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதற்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். இதிலும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். மேக்கப் போடாமலே நடித்துள்ளேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்த படத்தை இயக்குகிறார். எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். தயாரிப்பு துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ரசிகர்களை திருப்திபடுத்தும் கதையை தேர்வு செய்துள்ளார். குழந்தைகளுடன் பார்க்க கூடிய படமாக குடும்பங்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வரவழைக்கும் படமாக இருக்கும்.

    இடையில் உங்களை பார்க்க முடியவில்லையே?

    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன். பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள். அப்படியே கிராமத்து பெண் கேரக்டராக இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை. தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்லா நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க. இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.



    தமிழ் சினிமா இப்போது எப்படி இருக்கிறது?

    இப்போது தமிழ் சினிமாவின் கலரே மாறி வருகிறது... ஆலிவுட் படத்துறை மாதிரி மாறிவருகிறது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட வரிசையில் சேர்ந்துவிட்டது. மிக மிக அவசரம், டு லெட், எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம் தான். புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன். #Vasundara #KanneKalaimaane

    தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். #Tamannaah #KanneKalaimaane
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:

    கண்ணே கலைமானே படம் பற்றி?

    இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள்.

    உதயநிதி?

    அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார்.



    இந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த பாராட்டு?

    ஒரு காட்சியில் சிறப்பாக நடித்ததற்காக இயக்குனர் அல்வா கொடுத்தார். அந்த திருநெல்வேலி அல்வா எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு அதுவே மிகப்பெரிய பரிசு. அல்வா என்றதும் வேறு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டும்போது இனிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக கொடுத்தது. சீனு சார் படத்தில் நடிக்கும்போது தான் ஒரு சாதாரண குடும்ப பெண்ணுக்கு இருக்கும் பலங்கள் புரிகிறது. தர்மதுரையிலேயே அதை உணர்ந்தேன். ஆனால் பாரதி மிகவும் வித்தியாசமானவள்.

    கவர்ச்சி இல்லாமல் நடிக்கும் அனுபவம்?

    இதிலும் கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்றால் எல்லோரும் நினைப்பது போன்ற உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தெரியும் நடிப்பு உணர்ச்சியே கவர்ச்சி. அதிகமான குளோஸ் அப் காட்சிகள் இருக்கின்றன. எனது வேடம் மிகவும் இயல்பாக இருக்கும்.

    தமிழ் நன்றாக பேசுகிறீர்களே?

    நான் தமிழ் பெண் தானே...

    அப்போ தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?

    நிச்சயமாக. சீனு சாரிடம் பார்க்க சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன்.
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்து பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். #VijaySethupathi #Udhayanidhi
    ‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும் எடுத்து வருகிறார். யுவன்‌ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார்.

    அதுமட்டு மல்லாமல், இந்தப் படத்தின் இசைக்காக யுவனுடன் இளையராஜா, கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கைகோர்த்துள்ளனர். தேனியில் பரபரப்பாகப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்துள்ளார். உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.



    படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண் கலங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #KanneKalaimaane
    சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 



    இப்படத்தின் மூலம் சீனுராமசாமியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. 
    நடிகர் அஜித், தான் நடித்த படங்கள் வெளியாகும் முன்பு என்ன செய்தாரோ, அதை இயக்குனர் சீனு ராமசாமியும் தற்போது செய்திருக்கிறார். #Ajith #SeenuRamasamy
    சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காகவும், வெற்றி பெறவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செய்துள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் சென்றுள்ளார்.



    நடிகர் அஜித்தும், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். வீரம் படம் வெளியாகும் முன்பு திருப்பதில் முடி காணிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×