என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parthipan"

    • வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும்போது புரிந்தது.
    • 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள்.

    தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும், முன்னணி நடிகையுமான வரலட்சுமி 'தி வெர்டிக்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா சங்கர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சுஹாசினி, சுருதி ஹரிஹரன், வித்யுலேகா, தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    பட விழாவில் நடிகை சுஹாசினி பேசும்போது, "சின்ன வயதில் உங்கள் நடிப்பை பார்த்தேன் என்று பலரும் சொல்லும்போதெல்லாம், 'அவ்வளவு சீனியர் ஆகிவிட்டோமா?' என்று எண்ணத்தோன்றும். ஆனால் வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும்போது புரிந்தது.



    அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது, என் ரசிகை ஒருவர் எனக்காக, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு செய்துகொண்டு வந்தார். அப்போதுதான் என் வயதின் முக்கியத்துவம் புரிந்தது'', என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து பார்த்திபன் பேசும்போது, 'எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினி தான். 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால், தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி', என்று குறிப்பிட்டார்.

    அப்போது சுஹாசினி எழுந்து, 'எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்' என்றார். இதையடுத்து, 'பார்த்தீர்களா, இதுதான் திமிரு' என்றார் பார்த்திபன்.

    இது கலகலப்பூட்டும் விதமாக அமைந்தது.

    கண்ணே கலைமானே படத்தை அடுத்து பிரபல நடிகருடன் தமன்னா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Tamannah
    தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்தை பார்த்திபன் இயக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    பிரபுதேவா - தமன்னா கூட்டணியில் ஏற்கனவே ‘தேவி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை விஜய் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
    ×