search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மூலம்தான் பா.ம.க.வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார். தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான் என்று கூறி வருகிறார்.
    சென்னை:

    ஆளும் கட்சியை எதிர்த்தும், விமர்சித்தும் அரசியல் செய்வதுதான் எதிர்கட்சிகளின் வேலை. அந்த வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மட்டுமில்லாமல் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளும் முட்டி மோதுகின்றன.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியானது. அதே நேரம் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனியாக போட்டியிட்டது. அந்த கட்சி பெற்ற வாக்குகளால் 15 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.

    எனவே ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அ.தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக ஓரம் கட்டிவிடவில்லை என்பது தெரியவந்தது.

    ஜெயலலிதாவின் ஆளுமையும், தி.மு.க. எதிர்ப்பில் இருந்த உறுதியும்தான் அவர் இருக்கும் வரை அந்த கட்சிக்கு பலமாக இருந்தது.

    அவரது மறைவுக்கு பிறகு தலைமை மீதான நம்பிக்கையின்மை மட்டுமே அந்த கட்சியை சறுக்க வைத்தது.

    மீண்டும் தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தி கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தியே தீருவது என்ற தனது அஜென்டாவை நிறைவேற்றுவதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக வரிந்து கட்டி தமிழகத்தில் வளர்ந்து விடாமல் தடுப்பதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வின் திட்டங்களை உடைத்து பா.ஜனதாவை வளர்ப்பதில் அண்ணாமலை தீவிரமாக உள்ளார்.

    அதன்படி தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் அதிரடியாக செயல்படுகிறார். தி.மு.க.வின் கருத்துகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கிறார். மாவட்ட வாரியாக சென்று தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டி அடுத்த ஒரு மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்தப் போவதாக கெடு விதித்துள்ளார்.

    தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மத்திய அரசு மீது அமைச்சர்கள் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உடனடியாக விளக்கம் அளிக்கிறார். தி.மு.க. மீதான இந்த எதிர்ப்பு அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர உதவும் என்று நம்புகிறார்கள்.

    பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணியும் தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மூலம்தான் பா.ம.க.வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார். தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான் என்று கூறி வருகிறார்.

    திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டதாகவும் வளர்ச்சிக்கான, தொலைநோக்கு திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

    பா.ம.க. தமிழகத்துக்கான பல திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாகவும் ஒரு வாய்ப்பு தந்தால் தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

    ஆக, இந்த 3 கட்சிகளும் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் போட்டி போடுகின்றன. அதன்மூலம் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
    பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
    சென்னை:

    பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் தியாகராயர் நகர் பசுல்லா சாலை சந்திப்பில் உள்ள தி பென்ஸ் பார்க் விடுதியில் நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த வரைவை வெளியிட உள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024) பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கூட்டணி விவகாரத்தில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள்.

    ஏனெனில் தான் விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணம் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்.

    பிரதமர் மோடி நல்ல நண்பராக இருந்தும் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் ஜெயலலிதா தனித்து தேர்தலை சந்தித்தார். ‘மோடியா? இந்த லேடியா?’ என்று நேருக்கு நேர் சவால் விட்டார். அதில் இமாலய வெற்றி பெற்று சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத் தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அ.தி.மு.க. 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.

    ஆனால் பா.ஜனதா முதல் முறையாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்ந்தாலும் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே உண்மை. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

    அது மட்டுமல்ல ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதோடு பாராளுமன்ற தேர்தலில் கணிசமான எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது.

    பா.ஜனதாவுக்கு தலைவராக பொறுப்பேற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையும் அதற்கு ஏற்ற வகையில் அதிரடியாக அரசியல் களத்தில் காய்களை நகர்த்தி வருகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதாதான். இப்போதைய எதிர்க்கட்சியும் பா.ஜனதா தான் என்று பேசும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கி இருப்பது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் 24 பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள் என்று அண்ணாமலை பேசி வருவது அ.தி.மு.க.வை கூடுதல் கலக்கமடைய வைத்துள்ளன.

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் ஆவேசமாக மோதி வருகிறார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜனதா இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முயன்று வருகிறார்.

    இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி அமைத்தும், தனித்து போட்டியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு பா.ம.க.வால் சாதிக்க முடியாமல் போனது.

    இப்போது கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அன்புமணி தனது தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

    ஏற்கனவே தி.மு.க. அணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே பா.ஜனதா இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் பா.ஜனதா அதிருப்தி ஓட்டுகள், தி.மு.க. அதிருப்தி ஓட்டுகள் இரண்டையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கருதுகிறார்.

    சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜனதா அல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

    மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்.

    ஆனால், ஜூன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.

    எனவே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×