search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swamithoppu"

    • தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
    • பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார்.

    அய்யா வைகுண்டசாமியின் தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் உள்ள முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். அவர்கள் வந்ததும் அய்யாவை வழிபடுவார்கள்.அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால், இதனை "தல வாசல்" என்றும் அழைப்பார்கள். முற்காலத்தில் பகவான் அய்யா வைகுண்டர் தவம் புரிய தீர்மானித்தார். அதனால் சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் தவம் புரிந்தார்.

    தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

    அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். இத்தவத்தின் போது பாலையும், பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.

    மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனை நார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார். இவ்வாறு அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்கு வாசல் அமைக்கப்படுகின்றன.

    தலைமைப்பதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக, "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்று வழிபடுகின்றனர்.

    வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபட வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்" என்ற உயர்ந்த கொள்கையாகும். 'நான்' என்றால் பகவானாகிய அய்யா வைகுண்டரை குறிக்கிறது.

    நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இட வேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண், அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

    திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து, அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்து கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மகிமை அன்றே வெளிப்பட்டது. பக்தர்களின் நோயை குணப்படுத்தும் மகத்துவம் உடையது.

    தலைமைப்பதியின் வடக்கு வாசலின் முகப்பில் உள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
    • நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலு வீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்திரி கிணற்றங்கரையில் பக்தர்களுக்கு பதம் வழங்கப்பட்டது.

    அங்கிருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களில் வழிநெடுகிலும் பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், பன்னீர், தேங்காய் போன்றவற்றை சுருளாக வைத்து ஆசி பெற்றனர். இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கலிவேட்டை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது. மேலும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்து பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெற்றது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்திருந்தனர்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.

    வருகிற 27-ந்தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாஸ்த்தான் கோவில்விளை, செட்டிவிளை உட்பட பல சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அதனை தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட்கிழ மை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 27-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

    • திருவிழா கடந்த 2-ம்தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னு டைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்தி ரட்டு அம்மானை நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

    15-ம் நாளான நேற்று 16-ந் தேதி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இரவு 9-மணிக்கு பக்தர்களுக்கு திருக்கல்யாண பிச்சை வழங்கப்பட்டது.11மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு துவங்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கல்யாண திரு விழாவையொட்டி தலைமை பதி முன்பு மற்றும் பதியின் உள்பிரகாரங்களில், பள்ளியறையில் அலங்கார தோரணங்கள் அமைக்கபட்டிருந்தன.அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பலகாரங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர்.

    சாமிதோப்பு தலை மைப்பதி குரு பால ஜனாதிபதி பாராயணவுரையாற்றினார். திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிறைவடைந்தவுடன் அய்யா வைகுண்ட சாமி பச்சை பல்லாக்கில் எழுந்தருளி பதி சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவில் பள்ளியறை பணிவிடைகளை குரு பால லோகாதிபதி முன்னிலையில் குருமார்கள் பையன் கிருஷ்ண நாம மணி, பையன் செல்லவடிவு, வழக்கறிஞர் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனா வைகுந்த்,நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான நாளை 18-ந் தேதி அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக மணி மகுட சூட்டு விழா நடைபெறுகிறது.

    இதனையொட்டி காலை சிறப்பு பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பும் மாலை 4 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு திருவிழாவில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உட்பட கேரளா,மும்பை மாநிலங்களில் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா நாட்களில் தலைமை பதிவளாகத்தில் காலை மதியம் இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    • அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது.
    • திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தா்களின் புனித நூலாகும்.அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காா்த்திகை மாதம் 27ஆம் தேதி ஆகும்.

    இந்த நாளை அய்யாவழி பக்தா்கள் ஒவ்வொரு வருட மும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

    அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு தொடர்ந்து பணிவிடைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு பொதுமக்கள் கொண்டு வந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை பள்ளியறையில் வைத்து சிறப்பு பணிவுடன் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கு குரு. பால ஜனாதிபதி தலைமை வகித்தாா். குரு பால லோகாதிபதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச் செயலாளர் கிருஷ்ண மணி, பொருளாளர் பால்மணி, இணைச் செயலாளர் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அய்யா அருளிய அகிலத் திரட்டு அம்மானை சுவடி களை கைகளில் ஏந்திய அய்யா வழி பக்தா்கள் தலைமைப் பதி மற்றும் பள்ளி அறையை சுற்றி வந்து அகிலத்திரட்டு அம்மானை நூலை பள்ளி அறையில் வைத்து வழிபட்டனா். பின்னா் அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    • இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

    சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து 5 மணிக்கு ஏடு வாசிப்பும் தொடங்கப்பட்டது.

    சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றினார். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    பின்னர் இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    15-ம் நாள் விழாவான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்கு நிகழ்ச்சி, 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    • திருவிழா இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை போன்றவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்கப்பட்டு சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனி நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவில் வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்குதல் போன்றவையும், 18-ந் தேதி திருஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவையும் நடைபெறும்.

    • பக்தர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி அய்யாவை வணங்கி சென்றனர்.
    • பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு இனிமமாக வழங்கப்பட்டது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்ன தர்மம் நடைபெற்றது.

    • இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

    11-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளை செய்திருந்தனர்.

    பள்ளியறை பணி விடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும். வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய், போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வருகிறது.

    இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், பால்மணி, ராஜலட்சுமி, சத்தியசேகர், ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
    • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு கலிவேட்டைக்கு அய்யா புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரத வீதிகளையும் வாகனம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

    அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட்டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி,சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடந்தது.

    நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×