search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைத் திருவிழா"

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது.

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடி நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    • ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள்.இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறும். 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்றுகாலை 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். கொடியேற்று விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், சுவாமி பத்மேந்திரா கோவில் மேலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுரேந்திர குமார், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் ரோசிட்டா, கலாராணி மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது

    கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் இன்னிசை கச்சேரிகள் சமய சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது .

    9-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற்பொழிவு சொல்ரலுமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. தேரேட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி 28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், கொடியேற்று பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு சிறப்புரை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, ஆன்மிக சொற்பொழிவு, 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மண்டகப்படி, 8.30 மணிக்கு சாமி வாகனத்தில் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    7-ம் நாள் விழாவான அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந்தேதி இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேர்வடம் தொட்டு இழுத்தல் (தேரோட்டம்) நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், மாலை 5 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழி, 6.15 மணிக்கு கதா காலசேபம், இரவு 7.45 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல், 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளுதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • 27-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பிப்ரவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தே ரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச் சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழி பாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • 21-ந்தேதி காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜை நடக்கிறது.
    • 22-ந் தேதி கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை(வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.

    நாளைமறுநாள் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு வழிபாடு, இரவு 7 மணிக்கு சக்தி வழிபாடு என்ற தலைப்பில் மோகனசுந்தரம் சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    வருகிற 21-ந் தேதி காலை முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது.

    வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தை பூஜை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் ஜெயந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×