search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாபிஷேகம்"

    • 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டி உள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.

    விழாவின் 6-வது நாளான நேற்று இரவு தங்க-வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    7-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தரு ளிய சுவாமி-அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவ கங்கை ராஜா மண்டகப்படி யில் எழுந்தருளினார். இன்று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்ம னும் எழுந்தருளுகின்றனர்.

    ஒவ்வொரு நாள் விழாவும் வாழ்க்கையின் தத்துவத்தையும், பலனையும் எடுத்துகூறும் வகையில் நடந்து வருகிறது.

    8-ம் நாளான நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

    சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நாளை இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.

    மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • சித்திரை திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது.

    மதுரை:

    சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந் தேதிதிக்கு விஜயம் நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.

    முன்பதிவு

    இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்குகோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hree.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந் தேதி) முதல் 13-ந் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ -மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    டிக்கெட் கிடைக்குமிடம்

    அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்... இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.

    டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி- சுந்தரேசுவரரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
    • நாளை கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல் வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வேறு எந்த ஸ்தலங் களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைப வத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவில் நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மானசனத்தில் புறப்பட்டு வந்தனர். சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். அதேநேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. விழாவின் சிகர நிகழ்ச் சியாக நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் கிரிவல பாதை வழியாக சுப்பிரம ணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்.

    விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    • திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • வருகிற 26-ந்தேதி தேரோட்டமும், மகா தீபமும் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறந்தது, இதையடுத்து கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சி யாக 26-ந் தேதி காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெறும். பின்னர் மாலையில் கோவில் மூலஸ் தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக் கப்பனை கொளுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    கார்த்திகை தீப திரு விழாவின்போது மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மேல் தளத்தில் தாமிரக்கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். அதே வேளையில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் திருப் பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகள், படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் மலை மேல் உள்ள தீபத்தூணை சுற்றிலும் தற்காலிக வேலி அமைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருகிற 26-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் நகர் பகுதியை சுற்றிலும்

    500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • வளையல் விற்ற லீலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக் கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவ–ராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா–வையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைக–ளிலும் 4 ஆவணி மூல வீதி–களிலும் சுவாமியும், அம்ம–னும் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்து மண்டகப்படிக–ளில் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய அம் சங்களாக திருவிளையா–டல் புராண தொடர்பான உற்ச–வங்கள் நடைபெறும். அதன் படி கடந்த 19-ந்தேதி கருங் குருவிக்கு உபதேசம் செய் தல், 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற் கிழி அருளல், 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளல், 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டி லீலைகள் நடந்தன.

    நேற்று இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடந்தது. இன்று (25-ந்தேதி, வெள்ளிக்கிழமை) வளை–யல் விற்ற திருவிளை–யாடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன், சுந்தரேசு–வரரை தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ் வாக இன்று இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறு–கிறது. சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெரு–மான் ஆட்சிபுரிவார். இத–னைக் குறிக்கும் வகையி–லேயே சுந்தரேசப் பெருமா–னுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    நாளை (26-ந்தேதி) நரியை பரியாக்கியது, குதி–ரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந் தது நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக–ளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவா–தவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளு–வார்கள்.

    அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக் கப்படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபு–ரம் வழியாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடு–வதற்கும் அனுமதி அளிக்கப் படும். 28-ந்தேதி விறகு விற்றல் லீலை நடைபெறும்.

    • பட்டாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • இன்று மதியம் 12:30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவானது நேற்று முன்தினம் ராவண சம்காரத்துடன் தொடங்கியது.

    ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் 2-வது நாளான நேற்று விபீஷ்ணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து ராமபிரான், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்திலும் மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு கோதண்டராமர் கோவில் வைத்து இலங்கை மன்னராக ராவணனின் தம்பி விபீஷ்ணருக்கு, ராமபிரான் தலையில் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

    இதைதொடர்ந்து ராமர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு மாலை 5 மணி வரையிலும் பக்தர்கள் தீர்த்தம் நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

    ராமர் மற்றும் விபீஷ்ணர் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் கோவில் நடையானது மாலை 5 மணிக்கு மேல் திறக்கப்பட்டு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவின் கடைசி நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம் 12:30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.

    • ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2-ம் நாளான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன் பின்னர் விபீஷ்ணர் மற்றும் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆகியோர் வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதிகள் வழியாக நகர் வலம் வந்தனர்.

    பின்னர் ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவிலை சென்ற டைந்தனர்.அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் ராமர் சுவாமியை அழைத்து கொண்டு தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலை சென்றடைந்தது. அங்கு பகல் 1 மணிக்கு மேல் விபீஷ்ணருக்கு பட்டா பிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவாமிகள் சென்றதையடுத்து ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை நடைகள் சாத்தப்பட்டது. விபீஷ்ணர் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அங்கிருந்து சுவாமி புறப்படாகி மாலையில் கோவிலுக்கு வந்தடைந்தவுடன் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் நடந்தது.
    • தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் தீர்த்த வாரி திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அக்னி கரகம் கோவிலாளர் வீட்டுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது.

    மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. அம்மன் வைகை ஆற்றுக்குச் சென்று தீர்த்தமாடி கோவில் வளாகத்தில் பூ அலங்காரத்துடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ரிஷப வாகனத்தில் அம்மன் பவனி வந்தது. நேற்று மாலை பட்டாபிஷேகம் நடந்தது.

    இதில் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம கிருஷ்ணன் பட்டாபிஷே சொற்பொழிவாற்றினார்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
    • 3-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டனர்.

    ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    மீனாட்சி அம்மனுக்கு முடி சூட்டும் வைபவம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் 8-ம் நாளில் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும்வகையில் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன.

    இந்த நிகழ்வுகள் அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய சரவணன் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். இரவு 7.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தினால் ஆன செங்கோலும் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை தரிசித்தனர்.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் அளிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்பு மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியாக கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தார்.

    பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

    பட்டத்து அரசியாக பொறுப்பேற்ற பின்பு மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி, இன்று (திங்கட்கிழமை) மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருக்கல்யாணம், அதற்கு மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டமும் நடக்க இருக்கிறது. 4-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை, 5-ந் தேதி வைகையில் எழுந்தருளல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.

    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி, தேவதேவா்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணி மீனாட்சிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

    அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் திருவிழாவிற்கான வேலைகள் தொடங்கி விடும்.

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும். காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி சுந்தரேசுவரா் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் மக்கள் கூட்டமாக கூடி வரவேற்பார்கள். இது தவிர சுவாமிக்கு முன்னால் வரும் டங்கா மாடு, யானை, ஒட்டகம் மற்றும் சிறுவா், சிறுமியா்கள் இறைவனை வரவேற்று ஆடி பாடி வரும் காட்சியை காண உலகம் முழுவதும் இருந்தும் பக்தா்கள் கூட்டம் இந்நாளில் வந்து விடும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடை பெறும் விழாவில் 6-ம் நாளான நேற்று இரவு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யானை மகால் முன்பு நடந்தது. அப்போது தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் இன்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி சுப்பிரமணியர்- தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர்- தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார்.
    • புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×