search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா
    X

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா

    • அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது.
    • திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தா்களின் புனித நூலாகும்.அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காா்த்திகை மாதம் 27ஆம் தேதி ஆகும்.

    இந்த நாளை அய்யாவழி பக்தா்கள் ஒவ்வொரு வருட மும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

    அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு தொடர்ந்து பணிவிடைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு பொதுமக்கள் கொண்டு வந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை பள்ளியறையில் வைத்து சிறப்பு பணிவுடன் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கு குரு. பால ஜனாதிபதி தலைமை வகித்தாா். குரு பால லோகாதிபதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச் செயலாளர் கிருஷ்ண மணி, பொருளாளர் பால்மணி, இணைச் செயலாளர் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அய்யா அருளிய அகிலத் திரட்டு அம்மானை சுவடி களை கைகளில் ஏந்திய அய்யா வழி பக்தா்கள் தலைமைப் பதி மற்றும் பள்ளி அறையை சுற்றி வந்து அகிலத்திரட்டு அம்மானை நூலை பள்ளி அறையில் வைத்து வழிபட்டனா். பின்னா் அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    Next Story
    ×