search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு நடந்த போது எடுத்த படம்.

    சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

    சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து 5 மணிக்கு ஏடு வாசிப்பும் தொடங்கப்பட்டது.

    சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றினார். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    பின்னர் இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    15-ம் நாள் விழாவான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்கு நிகழ்ச்சி, 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×