search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer health"

    • கோடை காலத்தில் வெப்ப தாக்கம் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும்.
    • தோல் நோய்களும் தோன்றும்.

    கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும்.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும்.

    கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.

    • செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும்.
    • தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கடலூர் முதுநகர் எஸ்.டி. மருத்துவமனை டாக்டர் முகுந்தன் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு முதல் வழி தண்ணீர். 10 கிலோ எடையுள்ள குழந்தை தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்ற கணக்கில், குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அடிக்கடி பருக கொடுக்கவேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கழுவி கொடுங்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையான பழங்களும் கொடுக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு முதலியவற்றில், ஏதாவது ஒன்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் (சிக்கன், மட்டன்) வாரம் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதுமானது. அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஓட்டல், துரித உணவகங்களில் இருந்து உணவு வகைகளை வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தைகளின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.

    செயற்கை பொருட்களை (ஸ்மார்ட்போன், டி.வி.) முற்றிலும் தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
    • பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.

    செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.

    சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

    பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

    • தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
    • கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில் வெயிலின் நேரடித்தாக்கம் அதிகமாக இருப்பதால், முதலில் மனிதர்களுக்கு சருமத்தை அதாவது தோல்களை தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தோல்களை முதலில் பராமரிப்பது அவசியம்.

    தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அடிக்கடி சுத்தமான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்திக்கொள்ள வேண்டும். அதிக வாசனை உள்ள சோப், திரவியங்கள், பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் வெளியே வெயிலில் செல்ல நேரிட்டால் தொப்பி, குடை போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கோடை வெயில் சிறுவர், சிறுமிகளை அதிகமாக பாதிக்கக்கூடும், எனவே அவர்களை பாதுகாக்க வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    அதாவது கீரை, இளநீர், நுங்கு, மோர் மற்றும் இதர பழச்சாறுகள், நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கார உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களை தவிர்க்கலாம்.

    மேற்கண்ட தகவலை தோல் சிகிச்சை சிறப்பு நிபுணர் தேவ்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும்.
    • தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும்.

    இயற்கையின் நியதி அன்றும், இன்றும், என்றும் ஒன்றுதான். அதன் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் அதை மாற்ற முயற்சிப்பது தனிமனித பேராசை தான். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அபாய மணி அடிக்கும் நிலை யில், அதற்கான காரணத்தையும் தெள்ளத்தெளிவாக தெரிவித்து விட்டனர். ஆனால் அதை எந்தநாடும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.

    ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கிறது என்றால் போகப்போக .... தமிழ்நாட்டில் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரள வுக்கு மட்டுமே வெயில் நிலவும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்று வதை தவிர்ப்பது நல்லது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சிறப்பு.

    நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிகநார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரஸ் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடை யும். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெய்யில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.

    * வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.

    * வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானை யில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடியுங்கள்.

    * ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்றவற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) நெய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.

    * வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.

    * தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள். இரண்டு மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலையை தொங்க விடுங்கள்.

    * ஏ.சி. அறையில் அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுபோன்று தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.

    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

    கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்சனைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் உருவாக்கப்படுகிறது.

    ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும் என்பதால், வியர்வையை உறிஞ்சாது. இதனால், சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும். இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடையும் தளர்வாக இருக்க வேண்டும்.

    சிலர், குளிர்ச்சி இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவது, குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்துகொள்வது போன்ற பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். இது, மிகவும் தவறான பழக்கங்கள். ஈரமான ஆடைகள், பல்வேறு நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமையும். இதைத் தவிர்க்கவும். சரியான வழிகாட்டலின்றி, வீட்டு வைத்தியம் செய்யவும் வேண்டாம். இது சிலருக்கு அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்துவிடும். 
    கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இப்பொழுது வெயில் காலம் ஏற்பட்டுவிட்டது. இதில் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர்சத்து குறையலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும். இதனால் அடிக்கடி சிறுநீர் செல்ல நேரிடும் இது மேலும் நீரின் அளவினை உடலில் குறைக்கும்.

    அதிக சூடு இல்லாமல் இருக்க உங்களை வீட்டுக்குள்ளேயே அடையச் செய்யக்கூடாது. காலை, மாலைகளில் வெளியே வாருங்கள். நடை பயிற்சி செய்யுங்கள். இன்சுலின், மருந்து இவை அதிக உஷ்ணம், உரையும் குளிர் இரண்டிலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்பதை அறியுங்கள். ஆகவே மருந்துகளை பாதுகாப்பாக வையுங்கள்.

    * நன்கு தண்ணீர் குடியுங்கள். கை அருகிலேயே தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள்.

    * வெயில் காலம் என்பதால் உங்கள் சர்க்கரை அளவினை வீட்டிலேயே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதன்படி இன்சுலின் உபயோகப்படுத்துங்கள். (இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்)

    * மருந்து கைவசம் கை பையில் இருக்கட்டும்.
    * சிறிய உணவு கைவசம் இருக்கட்டும்.
    * தலை தொப்பி, கறுப்பு கண்ணாடி இவை வெளியில் செல்லும்பொழுது அவசியம் அணியுங்கள்.
    * வெயில் உங்கள் சருமத்தினை எரிக்காத வகையில் தகுந்த பருத்தி ஆடைகளை உடலை மூடி அணிந்து கொள்ளுங்கள்.

    அவ்வளவு தான். கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான்.
    மூட்டு வலி என்பது நம் வீட்டில் பலரிடம் நாம் கேட்கும் மிக சாதாரண வார்த்தை ஆகிவிட்டது. ஆர்த்லைட்டிஸ் என்ற இந்த வார்த்தைக்கு கீழ் 100 வகை பிரிவுகள் இருக்கின்றன.

    இந்த மூட்டு வலிக்கு கிருமி தாக்குதல், புகை பிடித்தல், முன்பு ஏற்பட்ட அடி, பரம்பரை உடலில் அதிக எடை என பல காரணங்கள் இருக்கக் கூடும். பல காரணங்களின் சேர்க்கையாகவும் இருக்கக் கூடும்.

    ஆனால் நமது வாழ்க்கை முறை மூட்டுவலி தவிர்க்கப்பட உதவும், பாதிப்பு  ஏற்பட்டால் மறு வாழ்க்கை முறைதான் கூடவோ, குறையவோ காரணமாக அமையும்.

    மூட்டு வலி எனும் பொழுது வலி வீக்கம், மூட்டுக்களை அசைப்பதில் கடினம் என இருக்கும். ஆக வரும் முன் காப்பதே எதிலும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.

    * உடற்பயிற்சி: இன்னமும் இதனை கடை பிடிக்காத மக்கள் கோடானு கோடி உள்ளனர். உடற்பயிற்சி உடல் நலன், மன நலனைக்காக்கும். என்பதோடு மூட்டு பாதுகாப்பிற்காக  ஆலோசனை பெற்று செய்யும் பயிற்சிகள் வெகுவான பலனை அளிக்கின்றது என ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

    * மருத்துவர்களை தவிர்த்தல்: பலர் மருத்துவர்களை சந்திப்பது என்றாலே அஞ்சுவர். கையில் கிடைக்கும் மாத்திரையினை எடுத்துக் கொண்டு பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொள்வர்.

    கோடை காலத்தில் கடற்கரை பகுதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு வெயிலும், பிசுபிசு வென்ற உணர்வும் வியர்வையும், காற்றின் ஈரப்பதத்தில் மாறுதலும் இருப்பதால் மூட்டு வலி பாதிப்புடையவர்கள் தனக்கு  பாதிப்பு கூடுதலாக இருக்கிறதென்றே சொல்வார்கள். பொதுவில் மிதான உஷ்ணம் மூட்டு வலி பாதிப்பு உடையவர்களுக்கு குறைந்த வலியினையே கொடுக்கும்.

    என்றாலும் மேற் கூறப்பட்டுள்ள காரணங்களால் இவர்கள் வலி கூடுவது போல் உணரலாம். அதிக வெய்யில் நேரத்தில் வீட்டுக்குள் இருத்தலும் காலை, மாலை நேர உடற் பயிற்சி, தேவையான அளவு நீர் குடித்தல், மருத்துவர் அளித்த மருந்து இவை மூட்டுவலி குறைய கண்டிப்பாய் உதவும்.

    ×