search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strike"

    • கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் ஆத்திரம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இது தொடர்பாக.பயனாளிகளிடம் கேட்டபோது இ சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் ,பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள்.மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பாக திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ராமசாமி, காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களிடம் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    • கந்தர்வகோட்டை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல் குளம் ஊராட்சியில் தெத்து வாசல் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும், உரிய நேரத்தில் பேருந்துகள் வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் பேருந்துகள் தெத்து வாசல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இன்றும் இந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், மருத்துவ பரிசோதனைக்கு செல்பவர்கள் என்று அக்கிராம மக்கள் காத்திருந்த னர். ஆனால் வெகு நேர மாகியும் பேருந்து வர வில்லை. இதனால் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த தெத்து வாசல் பட்டி,மஞ்ச பேட்டை கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    உரிய நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்தும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மேலாளர் வரவழைக்க ப்பட்டார். போலீசாரும், பணிமனை மேலாளரும் கிராம பொதுமக்களிடம், கூடுதல் பேருந்து வசதி, குறித்த நேரத்தில் பேருந்து, பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகி றது.

    இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் ஆப் வழியாக தங்கள் செல்போன் மூலம் வாகனங்களை புக்கிங் செய்து பயணம் செய்கிறார்கள்.

    இந்த போராட்டத்தால் அவர்கள் கார், ஆட்டோக்களை புக்கிங் செய்ய முடியவில்லை. ஆட்டோ நிலையங்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் வீடுகளில் இருந்து பஸ், ஆட்டோ நிறுத்தங்களுக்கு வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் ஆப் பயன்படுத்தாத ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதில் தீவிர மாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.

    கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது.

    இதற்கிடையே இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, ஊபர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    வேலைநிறுத்தம் குறித்து ஜாகீர் உசேன் கூறியதாவது:-

    ஓலா, உபேர் செயலி மூலம் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ, கார் வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் ஓடாது. புக்கிங் எடுக்க மாட்டோம். 2 வருடமாக இந்த அரசு முறைப்படுத்தவில்லை. எங்கள் தொழிலை முறைப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பாக மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

    போராட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், தேனி மாவட்ட செயலாளர் ராஜன், கரூர் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பூசாரி உள்பட நிர்வாகிகள் விளக்க உரையாற்றினர்.

    கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 6வது ஊதியக்குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்திட வேண்டும்.

    தமிழகத்தில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

    கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • அறந்தாங்கி அருகே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல் நடத்தினர்
    • வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட கண் மாய் மூலம் 500 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகி ன்றன.இந்நிலையில் மழைக்கால ங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்கு ளம், நெடுங்குளம், வண்ணா ன்குளம் ஆகிய குளங்களிலி ருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண் மாய்க்கு வந்தடையும்.ஆனால் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமி ப்பு செய்து வீடுகள் கட்டப்ப ட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்க டை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கி ன்றனர்.அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பை கள் மற்றும் கோழிக்கழிவு கள் ஆகியன இக்க ண்மாயில் கொட்டப்படுகிறது.இதனால் கண்மாய் தண் ணீரில் பல்வேறு வித மான தொற்றுக்கிருமிகள் உற்ப த்தியாகி, தண்ணீரை பயன்ப டுத்த முடியாத அவல நிலை உள்ளது.விவசாயத்திற்கு பயன்ப டுத்த வேண்டிய தண்ணீர் கழிவுநீராக மாறியதால் கட ந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக கிடப்பில் போட்டுள்ளனர்.இது தொடர்பாக துறை அதிகாரிகள் மற்றும் மாவ ட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகி றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மற்றும் அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் பேச்சுவா ர்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை
    • இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சியில் கன்னுத்தோப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெடுந்தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர்

    அரியலூர்,

    அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்துகள் வசதிக் கேட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கரமங்கலம், முத்துவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரியலூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி முடிந்து ஊருக்குச் செல்வதற்காக அரியலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக 2 மணி நேரமாக காத்திருந்தும், பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர். 

    • பஸ்கள் நின்று செல்லாததால்நிழற்குடை பகுதியில் டீக்கடை வைத்து போராட்டம்
    • விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    முசிறி 

    திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில் பேருந்துகள் நிற்காமல் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.முறையாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பேருந்துகளை நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து பணிமனை மற்றும் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் சமூக ஆர்வலருமான மனோகரன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முசிறி நகராட்சி ஆணையர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கலெக்டர் பயணியர் நிழற்குடை பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய பரிசுகள் போராட்டம் நடத்தினர்.
    • அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    புதுச்சேரி:

    கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் பணி காலம் கடந்த ஜூலை மாதம் முதல் புதுப்பிக்கப்படவில்லை

    அதோடு சமீபத்தில் வெளியான நர்சுகள் பணி நியமன அறிவிப்பிலும் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய நர்சுகள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினார்.

    அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்பந்த நர்சிகளின் பணிக்காலம் நீடிக்கப்படும் என்றும் உங்களுக்கு வேண்டியதை செய்வேன் அதுவரை பொறுமையாக காத்திருங்கள். என்றும் கூறினார். அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • குடிநீர் வழங்க கோரி கல்லாத்தூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் -ருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற பணியின் போது, பிராதன சாலையில், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புக் குழாய்கள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் குடிநீருக்காக ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்த கல்லாத்தூர் மக்கள், அப்பகுதியில் கடந்த 24-ந்தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×