என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லாத்தூர் கிராம மக்கள் சாலை மறியல்
- குடிநீர் வழங்க கோரி கல்லாத்தூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்,
ஜெயங்கொண்டம் -ருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற பணியின் போது, பிராதன சாலையில், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புக் குழாய்கள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் குடிநீருக்காக ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்த கல்லாத்தூர் மக்கள், அப்பகுதியில் கடந்த 24-ந்தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






