என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
- அறந்தாங்கி அருகே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல் நடத்தினர்
- வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட கண் மாய் மூலம் 500 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகி ன்றன.இந்நிலையில் மழைக்கால ங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்கு ளம், நெடுங்குளம், வண்ணா ன்குளம் ஆகிய குளங்களிலி ருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண் மாய்க்கு வந்தடையும்.ஆனால் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமி ப்பு செய்து வீடுகள் கட்டப்ப ட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்க டை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கி ன்றனர்.அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பை கள் மற்றும் கோழிக்கழிவு கள் ஆகியன இக்க ண்மாயில் கொட்டப்படுகிறது.இதனால் கண்மாய் தண் ணீரில் பல்வேறு வித மான தொற்றுக்கிருமிகள் உற்ப த்தியாகி, தண்ணீரை பயன்ப டுத்த முடியாத அவல நிலை உள்ளது.விவசாயத்திற்கு பயன்ப டுத்த வேண்டிய தண்ணீர் கழிவுநீராக மாறியதால் கட ந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக கிடப்பில் போட்டுள்ளனர்.இது தொடர்பாக துறை அதிகாரிகள் மற்றும் மாவ ட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகி றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மற்றும் அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் பேச்சுவா ர்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்