search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriReddy"

    அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC
    தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியதால் தமிழ் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது. 

    ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். 



    தற்போது  நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

    ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

    ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
     
    படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #SundarC

    திரைத்துறை பிரபலங்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டாதாக குற்றம்சாட்டியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது பட்டியலில் மேலும் சிலர் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks
    சென்னை:

    தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரைத்துறையில் சிலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக கூறி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இன்று வெளியிட்டுள்ள பதிவில், விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தந்தி டிவிக்கு  அளித்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

    நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.



    சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.

    கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?

    பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #TamilLeaks

    தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். #SriReddy #Vishal
    சென்னை:

    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.

    அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரை வெளியிட்டு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த வரிசையில் நேற்று ராகவா லாரன்சையும் இணைத்துள்ளார்.

    மூன்று முக்கிய நபர்களின் பெயர்களை ஸ்ரீ ரெட்டி அம்பலப்படுத்தியது, தமிழ் திரையுலகை கதிகலங்கச் செய்துள்ளது. இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.



    இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Vishal

    தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.

    கடந்த வாரம் ஒரு பேட்டியில், ’தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் இயக்குனர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்தது’.

    இந்த நிலையில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் நேற்று ஸ்ரீரெட்டி அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். 



    அதில், 5 வருடங்களுக்கு முன்னர், ஐதராபாத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவின் பார்டி நடைபெற்ற பார்க் ஹோட்டல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் என்றும், கிளப்பில் இருவரும் சேர்ந்து நடனமாடிய போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியது நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

    மேலும் மற்றொரு போஸ்டில், இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Srikanth

    தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #SriLeaks
    சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பாலியல் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- “உங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?”

    பதில்:- “நான் சிறு வயதிலேயே துணிச்சலான பெண்ணாக தான் வளர்ந்தேன். என்னுடைய குடும்பம் நடுத்தரமானது. டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். அங்கிருந்து சினிமாவில் நடிக்க வந்தேன்.”

    கே:- “பெரிய ஹீரோக்களை எதிர்க்கும் போது பல்வேறு சிக்கல்கள் வருமே. எப்படி சமாளிக்கிறீர்கள்?”

    ப:- “என்னைப் பொறுத்த வரை ‘வி.ஐ.பி.’, சாமானியன் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லுரி சீதா ரமராஜூ, சே குவாரா, பகத் சிங்... இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். பூலான் தேவி, ஜோதிரவ் பூலே ஆகியோரை முன்மாதிரியாக நினைக்கிறேன். அதனால் எனக்கு உள்ளுக்குள் தைரியம் இருக்கிறது.”

    கே:- “உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஆண்கள் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறதா?”

    ப:- “அப்படி சொல்ல முடியாது. நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. ஆண்களை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் ஆண்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரம் என்றாலும் வெளியே செல்லலாம். பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வதை நான் எதிர்க்கிறேன். பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தொந்தரவு எழுந்தால் தட்டிக் கேட்பேன்.”



    கே:- “உங்கள் குற்றச்சாட்டில் தமிழ் இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டதே?”

    ப:- “தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.

    நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு வி‌ஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோவில் கட்டும் அளவுக்குக்கூட பாசம் வைக்கிறார்கள்..”

    கே:- “தெலுங்கு கதாநாயகர்கள் மீது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா?”

    ப:- “எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் 90 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. பத்து சதவீதம் மட்டும் இல்லை. அமெரிக்காவில் ‘பலான வி‌ஷயத்தில் மாட்டிய தெலுங்கு நடிகைகள்’ என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தை விசாரிப்பதற்கு அரசு இறங்கி இருப்பது, என்னுடைய குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.”

    கே:- “உங்களை தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கலாம்?”

    ப:- “தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை தமிழ் சினிமாவிலேயே அர்ப்பணிக்க நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks
    ×