search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீலீக்ஸ்"

    பிரபலங்களின் ரகசிய வாழ்க்கை பற்றிய தகவலை திரட்டி வருவதாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி, அந்த கதவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தெலுங்கு நடிகர்கள் ராணாவின் தம்பி, நானி, ராஜசேகர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் குற்றசாட்டுகளை கூறினார். பின்னர் தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் புகார் கூறத் தொடங்கினார்.

    முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீண்டது. சென்னையிலேயே செட்டில் ஆன ஸ்ரீரெட்டி தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

    ஸ்ரீ ரெட்டி முகநூலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய ஹீரோ தன்னை அழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-


    “எனக்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரகசிய வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவல்களும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன். திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும். பட வாய்ப்புக்காக பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks

    ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த தெலுங்கு நடிகை ஹேமாவுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவு செய்துள்ள ஸ்ரீரெட்டி முதலில் உங்களது ஆபாச வீடியோவை நீக்குங்கள் என்று கூறியுள்ளார். #SriReddy #Hema
    சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாகவும், தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டனர்.

    சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தெலுங்கு நடிகை ஹேமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். 



    பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றார்.



    இதனால் கோபமான ஸ்ரீரெட்டி, ஹேமாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த மோதல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriReddy #Hema

    திரையுல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி நடிக்கும் அவரது வாழ்க்கைப் படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். #SriReddy #Varaki
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

    ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர். தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.



    இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #Varaki

    சென்னையில் அழகு நிலையம் ஒன்றை திறந்துவைத்த பிறகு நிரூபர்களை சந்தித்த நடிகை ப்ரியா பவானிசங்கர், பாலியல் துன்புறுத்தல் பற்றி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறியது சரியல்ல என்று கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy
    மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். இதில் வில்லன் நடிகர் சாம் பாலும் கலந்து கொண்டார்.

    பின்னர் நடிகை பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளும், துன்புறுத்தலும் இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது.



    திரைத்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஒரு தவறை செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல. என்னை பொறுத்த வரை குடும்பபாங்கான கதைகளில் மட்டும் நடிக்கப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy

    தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் கேள்விக்கும் பதில் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். #SriReddy #STR #Simbu
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். 

    அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த சிம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.

    ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக, தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.


    அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

    பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். #SriReddy #STR #Simbu #AskSTR

    சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், அவரது சாவலை ஸ்ரீரெட்டி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்விதமாக அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றம்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீது பரிதாபப்படுகிறேன். ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும், நடிப்பு திறமையை அவர் நிரூபித்து காட்டினால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து, இப்போதே சம்பள முன்பணம் கொடுப்பேன் என்றும் லாரன்ஸ் கூறினார். 



    லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீரெட்டி, அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நான் விசாரணைக்கு உட்கார்ந்தால் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நீங்கள் சரி என்றால் உங்கள் படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு திறமை இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் அதை நீக்கி விட்டார். #SriReddy #RaghavaLawrence

    சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.



    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றச்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீத பரிதாபப்படுவதாக கூறிய லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் அதற்கு ஸ்ரீரெட்டி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார். 


    லாரன்ஸின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அந்த வீடியோவுக்கு மேலே குறிப்பிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence

    தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறி, நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

    இந்த விவகாரத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். இயக்குநர் வாராகி ஸ்ரீரெட்டி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது, 



    என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் போராளி குறித்த கதையை இயக்கும் சமயத்தில், ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்? 

    நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்குவைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

    இதற்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனை தான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன். 



    நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்.

    உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். 

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். #SriReddy #RaghavaLawrence

    பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று இயக்குநர் வாராகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். #SriReddy #SriLeaks
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று ஸ்ரீரெட்டி கூறினார். இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீரெட்டி தன்னை விலைமாது என்று கூறிய இயக்குனர் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

    இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து மொழி பட உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பட வாய்ப்பு கேட்பவர்களை படுக்கையில் பயன்படுத்துகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட பெண். இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போராடுகிறேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து இருக்கிறேன். எங்குமே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.



    நீதிக்காக போராடுகிறேன். இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. நான் விலைமாது என்றும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாராகி என்பவர் புகார் கூறி இருக்கிறார். அவரை யார் என்றே தெரியாது. என்னை விலைமாது என்கிறாரே? அவர் என்னிடம் வந்தாரா? எனக்கு பணம் கொடுத்தாரா?

    பெண்களுக்கு மரியாதை கொடுக்க அவருக்கு தெரியவில்லை. என்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறேன். இந்த புகார் மீது உளவு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #Varaki

    சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு, ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். #SriReddy #Varaki
    பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றியதாக தெலுங்கு பட உலகினர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா மீது புகார் கூறி வருகிறார். சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். 

    ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். 

    இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.



    இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது,

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். #SriReddy #Varaki

    சிவா மனசுல புஷ்பா படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வாராகி, நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ஸ்ரீரெட்டி செய்வது விபச்சாரம் தான் என்று தாக்கிப் பேசினார். #Srireddy #Varaki
    வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, 

    படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு வற்புறுத்தியதாக கூறினார். சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. என் படத்தின் பெயரும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான் பிரச்சனை என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினார். அந்த மாதிரி பெயராக இருந்தால் மாற்றலாம். பெயரை மாற்றுவதற்கான சரியான காரணமும் சொல்லவில்லை. 



    ஸ்ரீரெட்டி மீது புகார் கூறியது பற்றி கேட்டதற்கு வாராகி கூறியதாவது,

    சினிமா துறையே ரொம்ப நலிந்து கிடக்கிறது. சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். லாரன்ஸ் யார் என்பது நமக்கு தெரியும், மக்களட, ஊனமுற்றோர் என லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபச்சாரம் என்று தான் நான் சொல்கிறேன். அதனால் தான் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளேன். #Srireddy #Varaki

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும், விளம்பரத்துக்காக நடிகர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறுவதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #BharathiRaja
    தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார்.

    இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு பட உலகில் இருந்து சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் திரைஉலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.



    தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாரதிராஜா ஸ்ரீரெட்டி குறித்து கூறியதாவது:-

    ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது.

    அப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது. இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை குறை சொல்லக்கூடாது’.

    இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார். #SriReddy #BharathiRaja

    ×