search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siva mla"

    • தி.மு.க. கண்டனம்
    • அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் சிதைக்க பாடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் புதுவையில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சபாநாயகர் கலந்து கொண்டது மரபு களை மீறும் செயலாகும்.

    சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போதித்த காந்தியடிகள், வள்ளலார், அம்பேத்கார் பெயரில் புதுவை மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

    2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுவை மக்களின் கலாச்சாரத்திற்கும், பன்முகத்தன்மை க்கும் துளியும் ஒவ்வாத ஒரு ஊர்வலத்துக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி. செல்வ கணபதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

    ஊர்வலத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், பா.ஜனதா

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரபுகளையும் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கே எதிரானதாகும்.

    இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா கேள்வி
    • புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் ஓதியம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் வழங்கக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை தொழிலாளர் துறை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காண வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக கவர்னர் மாளிகையில் வீசிய பெட்ரோல் குண்டு பற்றி காவல்துறை தெளிவாக கூறிவிட்டது. புதுவை கவர்னர் ஊரில் இல்லா விட்டாலும், கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி என்ன மிரட்டல் உள்ளது? மக்கள் வழித்தடங்களை மூடி வைத்துள்ளனர்.

    அதை முதலில் திறந்து விடுங்கள். சுற்றியுள்ள பூங்கா நுழைவு பகுதியை ஏன் மூடி வைத்துள்ளீர்கள்? முதலில் அதை திறந்து விடுங்கள்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    • அதிகாரிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
    • போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் உள்ள ஊர்களில் இருக்கின்ற மின்துறை பிரச்சினைகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்துறை முதன்மைப் பொறியாள ர்கள் சண்முகம், முரளிதரன், செயற்பொறி யாளர்கள் கலிவரதன் , ராமநாதன், உதவிப் பொறியாளர்கள் முருகேசன், கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலைப் பொறி யாளர்கள் செல்வநாதன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வில்லியனூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய இடங்களில் மின்மாற்றிகள் அமைத்தல், ஒருமுனை மின்சார இணைப்பை மும்முனை மின்சார இணைப்பாக தொகுதி முழுவதும் மாற்றுதல், தாழ்வாக செல்லும் பல மின்கம்பிகளை உயர்த்திக் கட்டுவதோடு, போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.

    பழைய மின்மாற்றிகளின் திறனை உயர்த்த வேண்டும், உயரழுத்த மின் கம்பிகள் போட முடியாத இடத்தில் மின் புதைவட கம்பிகளை அமைத்து மின்சப்ளை வழங்க வேண்டும், வருங்காலத்தில் அதிக மின்திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளை தெருவிளக்காக பயன்படு த்துகின்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் செய்து முடிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், மாநில இலக்கிய அணி அமைப்பா ளர் சீனு. மோகன்தாசு, தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், கழக முன்னோடிகள் அங்காளன், குலசேகரன், லட்சுமணன், இரமணன், ரபீக், வேதாச்சலம், கார்த்திகேயன், சரவணன், மிலிட்டரி முருகன், ஜனா, பாலகுரு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
    • ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் முதல்-அமைச்சரும், கவர்னரும் வாய் திறக்காமல் உள்ளனர்.

    இதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என மமதையில் சுற்றி வருபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பொதுமக்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

    கோவில் சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டாக இதே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர்தான் பதவியில் இருந்துள்ளார்.

    இவர் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்களையெல்லாம் மறு ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விலை நிலங்களை மனைப்பிரிவுகளாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவை நகர குழுமம், பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளது. விலை நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக பதியப்பட்டுள்ளன.

    வில்லியனூர் கொம்யூனில் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய ரூ.பல கோடி கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

    இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான போரட்டம் அல்ல, புதுவை அரசு துறைகளில் சில அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மோசடியாக பதியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு சிவா பேசினார். 

    • பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
    • தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியாங்குப்பம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

    தொகுதி செயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில், அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. சார்பில் வீராம்பட்டி னத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவச் சிலையை, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா,

    எம்.பி.யை அழைத்து வருகிற 5-ந் தேதி திறப்பது அன்று மாலை அரியாங்குப்பம் மெயின் ரோட்டில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மாநில மீனவர் அணி தலைவர் ரமேஷ், தொகுதி துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பிரதிநிதி தினகரராசு, மாநில துணை அமைப்பாளர்கள் கலிவரதன், வினோத்குமார், முகுந்தன், பாலபாரதி, சுப்பராயன், மதிவாணன், ஜபருல்லா, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர்.
    • கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில திமுகவுக்கு 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர். அடுத்த கட்டமாக கழகத்தின் 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக் கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

    புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, முதல் கட்டமாக இளைஞர் அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர் அணிக்கு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று புதுவை மாநில இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஒப்புதலுடன், கழக இலக்கிய அணிச் செயலாளர், வி.பி.கலைராஜன் அறிவித்துள்ளார்.

    இதன்படி, புதுவை மாநில இலக்கிய அணித் தலைவராக கலைமாமணி ராஜா, துணைத் தலைவராக பாண்டியன், அமைப்பாளராக சீனு.மோகன்தாசு, துணை அமைப்பாளர்களாக சோமசுந்தரம், தர்மராஜா, ஆளவந்தார், கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
    • பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது: -

    இந்தியாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்தால் வளர்ச்சி குறைந்து விடும். பா.ஜனதாவின் ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநில சம்பவம் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது.

    பிரதமர் மோடி இதைப்பற்றி 70 நாட்க ளுக்கும் மேலாக வாய்மூடி மவுனமாக இருந்துள்ளார். பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.

    நாடே பற்றி எரிகிறது. பெண்கள் கொதித்தெழுந்து ள்ளனர். இந்தியா முழுவதும் அனைத்து கட்சியும் போராட்டம் நடந்து வருகிறது. பா.ஜனதாவின் முகத்தில் மக்கள் கரி பூசி வருகின்றனர். பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக நியமித்தாலும், மணிப்பூரில் அநீதி இழைத்துள்ளார்கள்.

    மணிப்பூர் மாநில அரசை பிரதமர் கண்டிக்கவில்லை. இந்த பா.ஜனதா மோடி அரசை தூக்கி எறியும் காலம் வரும்.

    மணிப்பூர் கலவரம் மூலமாக பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சியை ஒடுக்கும் வேலையை பா.ஜனதா அரசு செய்து வருகிறது.

    ஆனால் நம் கூட்டணி எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. மதச்சார்பற்ற கூட்டணி அரசை வெற்றி பெறச் செய்ய நாம் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒத்தவாடை வீதியில் தொடங்கப்பட்டது.

    தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமாகிய கோபால் தலைமை தாங்கினார்.

    மாநில தி.மு.க. அமைப்பாளரும், புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வீடு, வீடாக சென்று தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதிநாராயணன், துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஸ்வரி, பொருளாளர் சசிகுமார், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், தொண்டரணி மதனா, ராஜேஷ், வர்த்தகர் அணி குரு என்ற சண்முகசுந்தரம், ஜெயப்ரகாஷ், இலக்கிய அணி ஆளவந்தார், தர்மராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்

    தொடர்ந்து, அம்மன் கோயில் வீதி, முல்லை நகர், செங்கேணி அம்மன் நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    • எதிர்கட்சி தலைவர் சிவா கேள்வி
    • மது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிதி பிரச்சினை சம்பந்த மாக எந்த அறிவிப்பும் செய்யாமல் மத்திய நிதி மந்திரி சென்றது புதுவை மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பெஸ்ட் புதுவை என சொல்லி சென்றார்.

    ஆனால் அவர் சொல்லி விட்டுச் சென்ற இந்த 2 ஆண்டில் ஒர்ஸ்ட் புதுவையாக மாறியுள்ளது.

    இப்படி ப்பட்ட சூழலில் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய மந்திரிகள் புதுவைக்கு படையெடுத்து அரசு பணத்தில் நலத்திட்டம் என்ற போர்வையில் தேர் தல் பிரச்சார கூட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

    10 லட்சம் வாக்காளர்கள் கொண்ட புதுவை மாநிலத்தில் லட்சத்து 41 ஆயிரம் பயனாளிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டது என்றால் தொகுதிக்கு எவ்வளவு பயனாளிகளுக்கு எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.

    புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற சிரமமாக உள்ளது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்- அமைச்சர் தமது வேதனையை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

    இப்போதாவது முதல்- அமைச்சர் உணர்ந்து கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியது வரவேற்கத் தக்கது.

    ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் உள்ள மாநில அந்தஸ்து குறித்து அந்த கடித்தத்தில் குறிப்பிடாதது

    ஏன்? மாநில அரசு அதிகாரத்திற்கு மாநில அந்தஸ்து தேவை என அடிக்கடி தனது குமுறலை வெளிப்படு த்தியவர் ரங்கசாமி தான்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்ட மாநில அந்தஸ்து தீர்மானம் இன்னும் கவர்னர் மாளிகையில் தூங்குகிறது. இதற்கு என்ன அர்த்தம். தமது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

    தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம் என்ன? புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதா? இல்லையா? இதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்பு
    • விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது

    புதுச்சேரி:

    திருக்காமீஸ்வரர் மேம்பட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பழனம் வேளாண் பல்பொருள் அங்காடி திறப்பு விழா வில்லியனூர் நாவிதர் மடம் எதிரில் நடந்தது.

    பழனம் வேளாண் நிறுவனத்தின் தலைவர் குலசேகரன் தலைமை தாங்கினார். செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். உறுப்பினர்கள் இளஞ்செழியபாண்டியன், வேணுகோபால், கோவிந்தன், விஜயகுமார், ஜெனார்த்தனன், புண்ணியகோடி, ராஜா, வீரப்பன், ராஜசேகர், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அங்காடியில் வில்லியனூர் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது

    நிகழ்ச்சியில், வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி, மாவட்ட துணை ஆட்சியர் தெற்கு முரளிதரன், கூடுதல் வேளாண் இயக்குநர் வசந்தகுமார், துணை இயக்குநர் ராஜேஸ்வரி, வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், டாக்டர் முருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், இரமணன், சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு
    • படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி தி.மு.க. சார்பில், கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உழவர்கரை குண்டு சாலையில் நடந்தது.

    உழவர்கரை தொகுதி செயலாளர் கலிய. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொகுதி அவைத் தலைவர் விஜயரங்கம் வரவேற்றார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, வக்கீல் அணி . லோககணேசன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அரிதேவன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:- –

    என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசு அமைவதற்கு முன்பாக அவர்கள் முன்வைத்த தேர்தல் முழக்கம் பெஸ்ட் புதுவை என்பதாகும்..ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை கடந்துவிட்ட நிலையில் புதுவைக்கு என்ன செய்தார்கள்?

    10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை நிரப்புவோம், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். செய்யவில்லை. படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதிய சட்டமன்ற கட்டிடம் வேண்டாமென்று கூறவில்லை. ஏற்கனவே சட்டமன்றம் கட்டுவதாக 4 முறை பூஜை போடப்பட்டது. அதுபோல் தற்போதும் ஆகிவிடக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம்.கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் மாநில அந்தஸ்து தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு கவர்னர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாரா? முதல்- அமைச்சரும் மாநில அந்தஸ்து சம்பந்தமாக எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு அழைத்துச் செல்லுவதாக சொன்னது என்னாச்சு.?. முதல் அமைச்சரை பொருத்தவரை அவருக்கு தேவை இருக்கும்போது மாநில அந்தஸ்தை கையிள் எடுப்பார். பிறகு அதை கைவிடுவார். இதுதான் அவரது வாடிக்கை.

    இந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பின்னோக்கி சென்றுள்ள புதுவையை மீட்டெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். வரும் காலம் மக்களாட்சி காலமாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ. கே. கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்
    • ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மணவௌி பஞ்சாயத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து மணவௌி ஒதியம்பட்டு, வெங்கடேஸ்வரா நகர், தண்டுக்கரை வீதி, மல்லிகை நகர் உள்ளிட்ட பலவேறு பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் மணவௌி பஞ்சாயத்தில் புதியதாக மனைப்பிரிவுகள் உருவானதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தொகுதி

    எம்.எல்.ஏ. சிவா கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அதனடிப்படை யில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப் பணித்துறையின் பொது சுகாதார கோட்டத்தின் மூலம் ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிக்கான பூமி பூஜை விழா வெங்க டேஷ்வரா நகரில் நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் ஒதியம்பட்டு, வெங்கடேஷ்வரா நகர், அன்னை இந்திரா நகர், மகாசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

    விழாவில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறு முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகாணந்தம், உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் ஞானவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×