search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு - உதவிதொகை
    X

    மாணவர்களுக்கு பரிசு மற்றும் உதவிதொகையை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு - உதவிதொகை

    • எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒத்தவாடை வீதியில் தொடங்கப்பட்டது.

    தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமாகிய கோபால் தலைமை தாங்கினார்.

    மாநில தி.மு.க. அமைப்பாளரும், புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வீடு, வீடாக சென்று தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதிநாராயணன், துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஸ்வரி, பொருளாளர் சசிகுமார், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், தொண்டரணி மதனா, ராஜேஷ், வர்த்தகர் அணி குரு என்ற சண்முகசுந்தரம், ஜெயப்ரகாஷ், இலக்கிய அணி ஆளவந்தார், தர்மராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்

    தொடர்ந்து, அம்மன் கோயில் வீதி, முல்லை நகர், செங்கேணி அம்மன் நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    Next Story
    ×