search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலை-ஆ.ராசா எம்.பி 5-ந் தேதி திறந்து வைக்கிறார்
    X

    செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசிய காட்சி.

    வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலை-ஆ.ராசா எம்.பி 5-ந் தேதி திறந்து வைக்கிறார்

    • பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
    • தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியாங்குப்பம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

    தொகுதி செயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில், அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. சார்பில் வீராம்பட்டி னத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவச் சிலையை, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா,

    எம்.பி.யை அழைத்து வருகிற 5-ந் தேதி திறப்பது அன்று மாலை அரியாங்குப்பம் மெயின் ரோட்டில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மாநில மீனவர் அணி தலைவர் ரமேஷ், தொகுதி துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பிரதிநிதி தினகரராசு, மாநில துணை அமைப்பாளர்கள் கலிவரதன், வினோத்குமார், முகுந்தன், பாலபாரதி, சுப்பராயன், மதிவாணன், ஜபருல்லா, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×